சென்னை, நவ. 28 - டீக்கடைகளுக்கான குடிநீர் கட்ட ணத்தை ரத்து செய்ய வேண்டுமென்று டீக்கடை உரிமையாளர்கள் வலி யுறுத்தி உள்ளனர். சென்னை பெருநகர டீக்கடை உரிமையாளர்கள் சங்கத்தின் 41வது பொதுப்பேரவை ஞாயிறன்று (நவ.27) கேரள சமாஜம் பள்ளியில் நடைபெற்றது. இந்த பேரவையில், உணவு பாது காப்புத்துறை உரிமத்தை இடையூறு இன்றி புதுப்பித்து தர வேண்டும், உரிமம் இல்லாத ஃபங்க் கடைகளை அனுமதிக்க கூடாது. டீக்கடைகளுக்கு அச்சுறுத்தலின்றி மாநகராட்சி, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும், மாநகராட்சி வணிக உரிமம், உணவு பாதுகாப்பு உரிமம் ஆகிய தொழில் உரிமங்கள் அனைத்தும் ஒற்றை சாளர முறையில் ஒரே இடத்தில் வழங்க வேண்டும். பிளாஸ்டிக் பூச்சு இல்லாத பேப்பர் கப்புகளை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். சொத்துவரி மற்றும் மின் கட்டணங்களை மறு ஆய்வு செய்து தளர்வுகள் செய்ய வேண்டும். மாதந் தோறும் மின் அளவீடு செய்யும் முறையை அமல்படுத்த வேண்டும், எரி வாயு சிலிண்டர்களை ஒன்றிய அரசு மானியத்துடன் அல்லது ஜிஎஸ்டி விலக்கு அளித்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் தீர்மானங்களாக வலியுறுத்தப்பட்டன. இதன்பின்னர் பேசிய சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ் கமார், “சட்டத்திற்கு உட்பட்டு தேவை யான உதவிகள் செய்யப்படும். டீக்கடை சங்கத் தலைவர்களையும், அதிகாரிகளையும் அழைத்து பேசி பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும்” என்றார். இந்தப் பேரவைக்கு சங்கத்தின் தலைவர் டி.அனந்தன் தலைமை தாங்கினார். செயலாளர் இ.விஜய குமார் (எ) சுந்தரம் வரவேற்றார். பொருளாளர் சி.கே.தாமோதரன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிர மராஜா, நவோதயா சுரேஷ்பாபு உள்ளிட்டோர் பேசினர்.