districts

சென்னை முக்கிய செய்திகள்

பாதாள சாக்கடைகளில் மனிதர்கள்  இறங்கும் நடைமுறையை ஒழித்திடுக!

தமிழக அரசுக்கு  உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஏப். 29- பாதாள சாக்கடைகளில் மனிதர்கள் இறங்கும் நடைமுறை முழுமையாக ஒழிக்கப்படவில்லை என வேதனை தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த நடைமுறையை ஒழிக்க அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. பாதாளச் சாக்கடைகள், கழிவுநீர் தொட்டிகள் சுத்தம் செய்யும் பணிக்கு மனி தர்களை பயன்படுத்தக் கூடாது, விஷவாயு தாக்கி பலியானவர்களுக்கு போதிய நிவாரணம் வழங்கவேண்டும், பாதாள சாக்கடைகளில் மனிதர்களை இறங்கச் செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி சபாய் கர்மாச்சாரி அந்தோலன் என்ற அமைப்பின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. கடந்த 2017 ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு, தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்திய நாராயண பிரசாத் அமர்வில் மீண்டும் திங்க ளன்று (ஏப். 29) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், “நாடு சுதந்திரமடைந்து 46 ஆண்டுகளுக்குப் பின் பாதாள சாக்கடைகளை சுத்தம் செய்வ தற்கு மனிதர்களை பயன்படுத்த தடை விதித்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது. மனித தன்மையற்ற இந்த நடைமுறையை ஒழிக்க இந்த சட்டத்தை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்” என உத்தரவிட்டனர். உச்ச நீதிமன்றம் பல உத்தரவு கள் பிறப்பித்த போதும், பாதாள சாக்கடை களில் மனிதர்கள் இறங்கும் நடைமுறை முழுமையாக ஒழிக்கப்படவில்லை எனத் தெரிவித்த நீதிபதிகள் என வேதனை தெரிவித்தனர். மேலும், இந்த நடை முறையை ஒழிக்க அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்ட னர். பாதாள சாக்கடைகளில் மனிதர்களை இறங்குவதை தடுக்கும் வகையில், இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும் எனவும் அரசுக்கு நீதிபதிகள் அறி வுறுத்தினர். பின்னர், பாதாள சாக்கடை களில் மனிதர்களை இறங்கச் செய்பவர்க ளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தூய்மைப் பணிகளுக்கு இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும். பாதாள சாக்கடைகளில் மனிதர்களை இறக்க தடை விதிக்கும் 2013ஆம் ஆண்டு சட்டத்தை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதேபோல, பாதாள சாக்கடைகளில் இறங்கி உயிரிழக்கும் தொழிலாளர்க ளுக்கு தற்போது ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்கப்படுகிறது. படுகாயமடைந்த வர்களுக்கு காயத்துக்கு ஏற்ப 20 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்படுகிறது. இந்த இழப்பீட்டுத் தொகையை மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை அதனை அதிகரிக்க வேண்டும் எனவும், உயி ரிழக்கும் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த உத்தரவுகளை அரசு முழுமையாக பின்பற்றும் என நம்பிக்கை தெரிவித்து, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 5ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

பெண்ணின் வயிற்றில் 5 கிலோ சினைப்பை கட்டி அகற்றம்

சிதம்பரம், ஏப். 29-  மயிலாடுதுறை மாவட்டம், அள குடி கிராமபகுதியைச் சேர்ந்த வீர மணி மனைவி சசிகலா(38) இவர் வயிற்று வலி காரணமாக அனு மதிக்கப்பட்டார். அப்போது மருத்து வர்கள் பரிசோதனை செய்து செய்த போது அவரது கருப்பையில் 22 செ.மீ நீள அகலத்தில் 5.1கிலோ சினைப்பை கட்டி இருப்பது தெரியவந்தது.  பின்னர் இது குறித்து அறுவை சிகிச்சைக்கான அனைத்து வித மான சோதனைகளும் மேற் கொள்ளப்பட்டு  வந்தது. இந்த நிலையில் அந்த பெண்ணிற்கு மருத்துவக் கல்லூரி மகப்பேறு மருத்துவர் வானதி தலைமையிலான மருத்துவ குழுவினர் திங்களன்று முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம்  அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.  அந்தப் பெண்ணுக்கு ஏற்கெனவே 2 முறை வயிற்றில் மகப்பேறு அறுவை சிகிச்சை செய்துள்ளதால் மிகவும் சிக்கலான முறையில் 1மணி நேரத்தில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு கருப்பையில் இருந்த 5.1 கிலோ சினைப்பை கட்டியை  அகற்றியுள்ளனர்.   கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் பெண்ணிற்கு எந்த செலவும் வைக்காமல் அறுவை சிகிச்சை செய்து அகற்றினர்.  இதற்கு மருத்துவக் கல்லூரி முதல்வர் திருப்பதி, கண்காணிப்பாளர் ஜூனி யர் சுந்தரேசன் உள்ளிட்ட சக மருத்துவர்கள், நோயாளிகள் மருத்துவ குழுவினருக்கு வாழ்த்துக் களை தெரிவித்தனர்.  அறுவை சிகிச்சை செய்து கொண்ட சசிகலா மற்றும் அவரது கணவர் கூலித்தொழிலாளி, இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

அரசு பேருந்து மீது தாக்குதல்

அம்பத்தூர், ஏப். 29- அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை இரவு சாலையில் சென்று கொண்டிருந்த மாநகர பேருந்தின் மீது கஞ்சா போதை ஆசாமிகள் கல்வீசி தாக்கி, அதன் முன் பக்க கண்ணாடிகளை உடைத்து விட்டு தப்பி ஓடி விட்டனர். அம்பத்தூர் தொழிற்பேட்டை தொலைபேசி அலுவலகம் சிக்னல் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு சிலர் கஞ்சா போதையில் வாகன ஓட்டிகளிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த மாநகர பேருந்தில் ஏறி, பயணிகள் மற்றும் ஓட்டுநர், நடத்துனரிடம் தகராறு செய்துள்ளனர். அவர்களை நடத்துனர் தட்டிக் கேட்டு,பேருந்தில் இருந்து கீழே இறங்கும்படி கூறியுள்ளார். பேருந்தில் இருந்து கீழே இறங்கிய அவர்கள், அந்த பேருந்தின் முன்பக்க கண்ணாடியை கல்வீசி தாக்கி உடைத்து விட்டு தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுமியை கடித்துக் குதறிய நாய்

கிருஷ்ணகிரி, ஏப்.29 - ஓசூரில் தெருநாய்களின் பெருக்கம் மிக அதிகமாக உள்ள நிலையில் மாநகராட்சி சார்பில் இதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படாத அவலம் உள்ளது. தெருநாய்கள் அளவுக்கு அதிகமாக பெருகி வரும்  நிலையில்அவைகள் குழந்தைகளையும் பெரியவர்களை யும் கடிப்பது அதிகமாகி வருகிறது. ஓசூர்  கோபி கார்டன் முதல் பகுதியில் திங்களன்று வீட்டுக்கு வெளியில் நின்று கொண்டிருந்த 5 வயது சிறுமி சந்திரிகாவை தெரு நாய்கள் கடித்து குதறியுள்ளது.முதுகுப் பகுதியில் சிறுமிக்கு அதிகமான காயம் ஏற்பட்டுள்ளதால் சிகிச்சைக்காக  தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் மேலும் தொடராமல் இருக்க மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

பணத்தகராறில் கடத்தப்பட்ட இளைஞர் மீட்பு

அம்பத்தூர், ஏப். 29- சென்னை நொளம்பூரில் பணத்தகராறில் கடத்தப்பட்ட இளைஞர் மீட்கப்பட்டு, 7 பேரிடம் விசாரணை நடைபெறுகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம், தொட்டியம் கிராமத்தைச்  சேர்ந்தவர் சிலம்பரசன் (23). இவர் முகப்பேர் மேற்கு பெரிய நொளம்பூரில்குடும்பத்துடன் வியாபாரம் செய்து வருகிறார். இவர் கடந்த ஞாயிறன்று இரவு தனது வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருக்கும் போது, அங்கு வந்த ஒரு கும்பலால் கடத்தப்பட்டார். இதையறிந்த அவரது தாயார் லட்சுமி, இதுகுறித்து நொளம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில்  காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.  விசாரணையில் பணத்தகராறில் ஒரு கும்பல் சிலம்பரசனை கடத்தி அம்பத்தூர் புறவழிச்சாலை அருகே உள்ள ஒரு தனியார் பெட்ரோல் பங்கில் உள்ள ஒரு அறையில் அடைத்து வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர் அங்கு சென்று  சிலம்பரசனை மீட்டனர். மேலும் இது தொடர்பாக நொளம்பூர் மாதா கோயில் நகரைச் சேர்ந்த ஜெய்கணேஷை பிடித்து, விசாரித்தனர். விசாரணையில் சிலம்பரசன் ஜெய்கணேஷ் இடம் ரூ.30ஆயிரம் கடன் வாங்கியிருப்பதும், அந்த கடனையும், வட்டியையும் திருப்பி செலுத்தாததால் சிலம்பரசனை கடத்தி இருப்பதும் தெரியவந்தது. இது தொடர்பாக நொளம்பூர் காவல் துறையினர்  8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, ஜெய்கணேஷ் அவரது கூட்டளிகள் முகப்பேர் மேற்கு பகுதியைச் சேர்ந்த கவுதம் (22), மதுரவாயல் ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் (22), அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் (25), சின்ன நொளம்பூர் பகுதியைச் சேர்ந்த வருண் (19), அதே பகுதியைச் சேர்ந்த வினோத்குமார் (18), ராஜேஷ் (20) ஆகிய 6 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இருவரை தேடி வருகின்றனர்.

தாயிடம் பால் குடித்த  பெண் குழந்தை உயிரிழப்பு

அம்பத்தூர், ஏப்.29- பூந்தமல்லியில் தாயிடம் பால் குடித்த போது, பெண் குழந்தை ஞாயிற்றுக்கிழமை (ஏப்,30) உயிரிழந்தது. பூந்தமல்லி அருகே கோரிமேடு பகுதியைச் சேர்ந்தவர் முகமது செரீப் (25). இவர் சமையல்காரர். இவரது மனைவி பர்க்கத் நிஷா (22).இவர்களுக்கு கடந்த 21 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை ஒன்று பிறந்தது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை பர்க்கத் நிஷாவிடம் குழந்தை பால் குடித்து கொண்டிருந்த போது, திடீரென்று குழந்தை மயங்கியதை கண்டு தம்பதியினர் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து தம்பதியினர் குழந்தையை மீட்டு பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை வரும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.  தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற பூந்தமல்லி காவல் துறையினர்  குழந்தையின் உடலை மீட்டு, உடற்கூறு சோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து குழந்தை உயிரிழப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பூந்தமல்லியில் பிறந்து 21 நாள்களான பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லாரி மோதி கூலி தொழிலாளி பலி

 திருக்கனூர், ஏப்.29- திருக்கனூர்அடுத்த கூனிச்சம்பட்டு பிள்ளையார் கோவில் தெரு, அரசு குடியிருப்பைச் சேர்ந்தவர் சின்னப்பையன்  (70) கூலி தொழிலாளி. இவர் ஞாயிறன்று சாலையில் நடந்துசென்று கொண்டிருந்தபோது கூனிச்சம்பட்டு பகுதியில் இருந்து அதிவேக வந்த லாரி அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அருகில் இருந்த வர்கள், மீட்டு கதிர்காமம் அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.அங்கு பரிசோதனை செய்த டாக்டர் சின்னப்பையன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார். புகாரின் பேரில் வில்லியனூர் போக்குவரத்து காவல்துறையினர் லாரி ஓட்டுநர் செட்டிப்பட்டை சேர்ந்த தமிழ் என்பரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

கடலூர் மாவட்டத்தில் குடிநீர்  தட்டுப்பாட்டை போக்க வேண்டும்  மாவட்ட நிர்வாகத்திற்கு சிபிஎம் வலியுறுத்தல்

கடலூர், ஏப்.29- கடலூர் மாவட்டம் முழுவ தும் நிலவிவரும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடலூர் மாவட்ட செயற்குழு வலி யுறுத்தியுள்ளது. பேருந்து நிலையம், கடை தெரு மற்றும் நகரத் தின் முக்கியமான இடங்க ளில் குடிநீர் வழங்க மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் ஏற்பாடு செய்ய வேண்டும். சிதம்பரம், காட்டு மன்னார்குடி வட்டங்களில் சாகுபடிக்கும் சென்னை குடி நீருக்கு ஆதாரமாக உள்ள வீராணம் ஏரி தற்போது நீரின்றி காய்ந்து உள்ளது. இதனை தூர் வாருவதற்கு தேவையான நிதியை ஒதுக்கி தமிழக அரசு தூர் வார நடவடிக்கை எடுக்க வேண்டும். விழுப்புரம் -தாம்பரம்  பாசஞ்சர் ரயிலை கடலூர் துறைமுகம் வரை நீட்டிக்க  வேண்டும். மயிலாடுதுறையி லிருந்து கடலூர் துறைமுகம்  வரை மைசூர் மற்றும் கோவை விரைவு வண்டி களை நீட்டிக்க ரயில்வே போர்டு ஒப்புதல் அளிக்க  நடவடிக்கை எடுக்க வேண்டு மென செயற்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

போக்சோ சட்டத்தில் பாதிரியார் கைது

கிருஷ்ணகிரி, ஏப்.28- ஓசூர் மாநகராட்சிக்குட் பட்ட டைட்டன் டவுன்ஷிப் பகுதியில் வசித்து வருப வர் 57 வயது மேவால்ட். இவர், மத்திகிரி பகுதியில்  செவன்த் டே அட்வென்டிஸ்ட்  எனும் திருச்சபை நடத்தி வருகிறார்.  நேபாளத்திலிருந்து வந்து இங்கு வசித்து வரும் சிறுமி ஒருவர் அடிக்கடி ஜெபக்கூட்டங்களில் சென்று வருவது வழக்கம்.  பாதிரியார் மேவால்ட் தொடர்ந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்து வந்ததாக பெற் றோரிடம் கூறியுள்ளார்.  அதையடுத்து ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.  குழந்தைகள் நல அலுவலர் விசாரணை செய்து பாதிரியார் மேவால்ட் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.