சிதம்பரம், அக். 26- சிதம்பரம் சாராட்சியர் அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பரங்கிப் பேட்டை வடக்கு ஒன்றியச் செயலாளர் விஜய் தலைமையில் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, சிதம்பரம் நகர்மன்றத் துணைத் தலைவர் முத்துக்குமரன் மற்றும் வில்லியநல்லூர் கிளைச் செயலாளர், கிராம பொதுமக்கள் மனு ஒன்றை அளித்தனர். அதன் விவரம் வருமாறு:- சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்டது வில்லியநல்லூர் கிராமம். இந்த கிராமத்தில் வசிக்கும் சோம சுந்தரம் (29) கூலி தொழிலாளி. அவர் குடும்ப வறுமையின் காரணமாக சிதம்பரத்தில் இயங்கி வரும் நார்த்தன் ஆர் கே கேப்பிட்டல் லிமிடெட் என்ற தனி யார் நிதி நிறுவனம் நடத்தி வரும் பிரகதி சுய உதவி குழு மூலம் ரூ.40 ஆயிரம் நுண்கடன் பெற்றுள்ளார். மாத தவணையாக ரூ. 2180 கட்ட வேண்டும். 2 மாதம் முறையாக கட்டிய வர் 3 ஆவது மாதம் பணம் கட்ட 4 நாட்கள் தாமதம் ஆகியுள்ளது. இதனால், சோம சுந்தரத்தை பொதுமக்கள் மத்தியில் கடந்த 10 ஆம் தேதி மிகவும் கீழ்த்தரமான வார்த்தை களால் திட்டியுள்ளார். இதனால் மன வேதனை அடைந்த அவர், கடந்த 11ஆம் தேதி பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். கடலூர் அரசு மருத்துவமனையில் அனு மதித்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 20 ஆம் தேதி உயிரிழந்தார். இந்த மரணத்திற்கு காரணமான சம்பந்தப்பட்ட நுண்கடன் நிதி நிறுவன ஊழியர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பலியானோர் குடும்பத்திற்கு நிதி நிறுவனம் உரிய நஷ்ட ஈடு தர வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.