மாமேதை காரல் மார்க்ஸின் 140 ஆவது நினைவு தினத்தை ஒட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் அலுவலக வரலாகத்திலுள்ள காரல் மார்க்ஸ் சிலைக்கு மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.சுப்பராயன், ஜே.ராஜேஷ் கண்ணன், மாநகரச் செயலாளர் ஆர்.அமர்நாத், மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.கே.பக்கிரான், எஸ்.தட்சிணாமூர்த்தி, எழுத்தாளர் சங்க மாவட்டச் செயலாளர் பால்கி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.