districts

img

ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் ஜோசப் கென்னடி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி செயலர் சந்தோஷம் தொடர்ந்து ஊழியர்களுக்கு எதிராக விரோத போக்கை கண்டித்தும், அவரை உடனடியாக பொறுப்பில் விடுவிக்க வேண்டும், முன்னாள் ஊராட்சி செயலர் மற்றும் ஊராட்சி அலுவலக ஊழியர்களின் மீது காவல் நிலையத்தில் அளிக்கப்பட்டுள்ள புகார் மனுவை திரும்ப பெற அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிர்வாகிகள் வலியுறுத்தினர்.