செங்கல்பட்டு,ஜூன் 2-
செங்கல்பட்டு அரசு மருத்துவகல்லூரி மருத்துவ மனையில் பயிற்சி பெண் டாக்டருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக புதனன்று பயிற்சி மருத்துவர்கள் 100க்கும் மேற்பட்டோர் கருப்பு பட்டை அணிந்து பணியை புறக்கணித்து பெண் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.