districts

சாலை விபத்தில் வாலிபர் பலி

திருவொற்றியூர், அக். 14- திருவொற்றியூர், கிராமத்தெரு, அம்சா தோட்டத்தைச் சேர்ந்தவர் சண்முகம் (73). இவர் வியாழக்கிழமை இரவு 10 மணியளவில் எண்ணூர் விரைவு சாலையில் உள்ள திருவொற்றியூர் மண்டல நவீன எரிவாயு தகன மேடை அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் சண்முகம் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் பலத்த காயமடைந்த சண்முகத்தை திரு வொற்றியூர் காவல் துறையினர் மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ள னர். இது குறித்து வண்ணாரப் பேட்டை போக்குவரத்து பிரிவு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கிறார்கள்.

;