சிதம்பரம், மே 12- சிதம்பரம் வட்டம், குமராட்சியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டம் நடைபெற்றது. ஒன்றியத் தலைவர் முனுசாமி தலைமை தாங்கினார். கடலூர் மாவட்டச் செயலாளர் சரவணன் கலந்துகொண்டார். சிபிஎம் ஒன்றியச் செயலாளர் மனோகரன், விவசாய சங்கத்தின் மூத்த தலைவர் மாசிலாமணி உட்பட பலர் கலந்துகொண்டனர். சங்கத்தின் ஒன்றியத் தலைவராக வி.கே ராதா, செயலாளராக ஆர்.புஷ்பராஜ், பொருளாளராக பாலமுருகன் தேர்வு செய்யப்பட்டனர்.