ராயபுரம்,டிச.1- வடசென்னையின் அடை யாளமாக கருதப்பட்ட அகஸ்தியா தியேட்டரை இடிக்கும் பணி தொடங்கி யுள்ளது. கடந்த 55 ஆண்டுகளாக சினிமா ரசிகர்களை மகிழ்ச்சி யில் ஆழ்த்தியது. 1967-ம் ஆண்டு கே.பாலசந்தரின் பாமா விஜயம் படத்தின் மூலம் தனது திரைப் பயணத்தை தொடங்கிய அகஸ்தியா தியேட்டர் வடசென்னை பகுதி மக்களின் பொழுதுபோக்கு தளமாகவே திகழ்ந்தது. உலகம் சுற்றும் வாலிபன் ஓடியபோது எம்.ஜி.ஆர். இந்த தியேட்டருக்கு வந்து சென்றுள்ளார். 70 எம்.எம். திரையுடன் டால்பின் சிஸ்டத் துடன் கூடிய தியேட்டர் என்பதால் அகஸ்தியா தியேட்டருக்கு சென்று மக்கள் படம் பார்ப்பதை அதிகம் விரும்பினார்கள். 85 காசு டிக்கெட்டில் தொடங்கி ரூபாய் 25 பைசா, 5 ரூபாய் வகையி லும் டிக்கெட் கட்டணம் இருந்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு முதலே இங்கு காட்சிகள் நிறுத்தப்பட்டி ருந்த நிலையில் தற்போது தனது தோற்றத்தையும் அகஸ்தியா தியேட்டர் இழந்து வருகிறது. இதனை தொடர்ந்து தண்டையார் பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி மக்கள் தியேட்டருக்கு விடை கொடுத்துவிட்டனர்.