மதுராந்தகம், பிப்.27- ஆதிதிராவிடர் மக்களுக்கு வழங்கிய குடிமனை பட்டாவை அடங்களில் ஏற்ற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஒன்றியம், கள்ளபிரான்புரம் ஊராட்சிக்குட் பட்ட வள்ளுவப்பாக்கம் கிராமத்தில் ஆதி திராவிட மக்களுக்கு 1972 ஆம் ஆண்டு 115 பேருக்கு ஆதிதிராவிட நலத்துறையின் சார்பில் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. இந்த பட்டா சுமார் 35 ஆண்டுகளாக அடங்லில் ஏற்றாமல் இருந்து வருகின்றது. இதனால் பட்டா வாங்கிய ஆதிதிராவிட மக்கள் வீடு கட்ட முடியாமலும், மின் இணைப்பு பெற முடியாமலும், அரசு தொகுப்பு வீடு, கல்வி கடன் போன்ற எந்த வித அடிப்படை வசதிகளையும் பெற முடியா மல் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். இது குறித்து ஆதிதிராவிட நலத்துறை அலுவலர், வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைத்து அலுவலகங்களிலும் பல முறை யிட்டு மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை. மேலும் பலமுறை ஊராட்சி மன்றத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டும் இதுவரையிலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் மாவட்ட ஆட்சி நிர்வாகம் வள்ளுவப்பாக்கம் பகுதியில் வசிக்கும் பட்டியலின மக்களுக்கு ஆதிதிராவிடர் நலத்துறையால் வழங்கப்பட்ட பட்டாவை அடங்கலில் ஏற்றி முறையான பட்டா வழங்க வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவல கம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காத்திருக்கும் போராட்டம் செவ்வாயன்று (பிப்.27) நடைபெற்றது. மதுராந்தகம் வட்டக் குழு உறுப்பினர் கே.மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் முன்னாள் மாவட்ட செயலாளர் டி.கிருஷ்ணராஜ், வட்ட செயலா ளர் எஸ்.ராஜா, மாவட்டக் குழு உறுப்பினர் எம்.எஸ்.அர்ஜுன்குமார், வட்டக்குழு உறுப்பினர்கள் வி.சசிக்குமார், எம். இந்திரா, கிளைச் செயலாளர்கள் சி.மாதவன், யு.அனுசியா, கே.டேனிவேல், வி.பூங்கொடி உள்ளிட்ட பலர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். மதுராந்தகம் வட்ட துணை வட்டாட்சி யர் நேரில் வந்து ஒரு மாத காலத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தன் அடிப்படையில் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.