திருவண்ணாமலை, ஜூன்.26-
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம் திண்டிவனம் ஊராட்சி பகுதியில் மாற்றுத்திறனாளி களுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் வேலை வழங்க கேட்டு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் காத்திருக்கும் போராட்டம் நடத்தப்பட்டது.
மாற்றுத் திறனாளிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் ரமேஷ் பாபு மாவட்ட செயலா ளர் சிவாஜி ஆகியோர் தலைமை தாங்கினர். இந்த காத்திருக்கும் போராட் டத்தில் மாதர் சங்க மாவட்டச் செயலாளர் அஞ்சலி, விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகிகள் சரவ ணன், ரவிராஜ், விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் உதயகுமார், ஓய்வூதியர் சங்க நிர்வாகி கிருஷ்ண மூர்த்தி, கட்டுமான தொழிலா ளர் சங்க மாவட்ட துணைத் தலைவர் விக்ரமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போளூர் வட்டார செயலாளர் ரவிதாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு உடனடியாக வேலை வழங் கப்படும் என போளூர் வட்டார வளர்ச்சி அலுவ லர் லட்சுமி எழுத்து பூர்வ மாக உறுதி அளித்ததை தொடர்ந்து காத்திருக்கும் போராட்டம் கைவிடப் பட்டது.