கடலூர்,ஆக.27- சாதனையாளர்களை கொண்டாடுவதை விட 100 மடங்கு உயர்வானது சேவை செய்ப வர்களை கொண்டாடுவது என்று மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கூறினார். கடலூரில் அனைத்து குடி யிருப்போர் சங்கங்களின் கூட்ட மைப்பின் 6-வது மாநாடு மற்றும் சாதனையாளர்களுக்கு பாராட்டு விழா சனிக்கிழமை (ஆக,26) நடைபெற்றது. இதில் சு.வெங்கடேசன் சிறப்புரை யாற்றியதாவது; சேவையை கொண்டாடும் சமூகம்தான் சிறந்த சமூகமாக அமையும். இயற்கையை கொண்டாடுகிற மரபு தமிழ் சமூகத்துக்கு உண்டு. கடையேழு வள்ளல்களும் இயற்கையை கொண்டாடினார்கள். இயற்கையின் ஒவ்வொரு அசைவுகளையும் கோட்பாடுகளாக தத்துவங்களாக மாற்றி இன்று வரை அனுபவித்து வருகின்றோம். இந்த மாநாட்டில் பொது இடங்களை மீட்டுள்ளதாக கூறி னார்கள். இன்று பொது இடங்களை ஆக்கிரமித்து வருகின்ற சூழலில் பொது இடங்களை மீட்கப்பட்ட உங்களுக்கு பாராட்டுதலை தெரி வித்துகொள்கிறேன். ஒரு கிராமம் உருவாக வேண்டும் என்றால் முதலில் குளத்தை உருவாக்க வேண்டும், அதற்கு அடுத்தது மாடு உரச கல் நட வேண்டும் என்று சங்க காலத்தில் எழுதி வைத்துள்ளனர். விலங்கின் உயிர் மீது அவ்வளவு அன்பு வைத்திருந்தனர் என்பது இதையடுத்து தெரிகிறது. ஆங்கிலேய அதிகாரி ஒரு சட்டம் கொண்டு வந்தான். எந்த வீட்டுக்காரனும் பக்கத்து வீட்டை விட உயரமாக வீடு கட்டக் கூடாது என்று, அந்த சட்டத்தால் 20 வருடங்கள் அந்த பகுதியில் ஏற்றத்தாழ்வு இல்லாமல் இருந்தது. இருப்பதிலேயே கடினமான வேலை என்ன என்றால் நல்ல வற்றை செய்வதுதான். மத்திய அரசு கல்வி குழு உறுப்பினராக உள்ளேன். மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆய்வு மேற்கொண்ட போது மும்பை நகரத்தில் மட்டும் இந்தியா விலேயே அதிக அளவு கல்வி கடன் வழங்கப்பட்டுள்ளது தெரிய வந்தது.
மதுரை மாவட்டத்தில் மாண வர்களுக்கு வங்கிகள் மூலமாக அதிகளவு கல்வி கடன் பெற்றுக் கொடுத்துள்ளேன். கடந்தாண்டு மதுரையில் கல்வி கடன் ரூ.32 கோடி வழங்கப்பட்டது. இந்த ஆண்டு ரூ.130 கோடி ரூபாய் பெற்றுக் கொடுத்துள்ளேன்.ஆனால் அதற்காக பெற்ற அவமானங்கள் அதிகம். கெட்டவர்கள் எல்லாம் நம்பிக்கையோடு உள்ளனர். நல்ல வர்கள் எல்லாம் நம்ப முடியாமல் உள்ளனர். கல்வி கடன் கொடுத்தால் திரும்பி வரமாட்டேங்குது என்று அதிகாரிகள் சொல்கின்றனர். இந்தியா முழுக்க கல்வி கடனில் திரும்பி வராத தொகையை சேர்த்தால் இந்தியாவில் அதானி என்ற ஒரே ஒரு நபர் திரும்பிக் கொடுக்காத கடனுக்கு சமமாகும். நல்ல விஷயத்தை செய்யப் போனால் எவ்வளவு சரியாக இருக்கிறீர்கள், எவ்வளவு பெரிய அவமானத்தை சந்திக்க வேண்டும், எவ்வளவு பெரிய வலியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரியும். எனவேதான் நல்ல விஷயங்களை செய்பவரை பாராட்டுவது இந்த சமூகத்தில் தலையாய பணி. பணத்திற்கு பின்னால் ஓடுகின்ற மனநிலை மொத்த சமூகத்திலும் உருவாக்கப்பட்டுள்ளது. சாதனை யாளர்களை கொண்டாடுவதை விட 100 மடங்கு உயர்வானது சேவை செய்பவர்களை கொண்டாடுவது. நீங்கள் சேவை செய்தவர் களை கொண்டாடியது பாராட்டத்தக்கது. இவ்வாறு சு.வெங்கடேசன் பேசினார்.