கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில், கல்லூரியை பசுமையாக்கும் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் விழா முதல்வர் (பொறுப்பு) ராமகிருஷ்ணன் சாந்தி தலைமையில் நடைபெற்றது. அப்போது மகிழம், இலுப்பை, நாவல், வேம்பு அத்தி உள்ளிட்ட ஏராளமான மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில் விலங்கியல் துறை பேராசிரியர் கண்ணன், புள்ளியல் துறை பேராசிரியர் சுசி கணேஷ்குமார், தாவரவியல் துறை பேராசிரியர்கள் பாவாடை, அன்பழகன், சிவசங்கர மூர்த்தி, ராமகிருஷ்ணன், பேராசிரியர் நிர்மல் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.