districts

வெளிநாடுகளிலிருந்து கடத்தப்படும் அரியவகை உயிரினங்களால் நோய்பரவும் அபாயம்

ஆலந்தூர்,டிச.24-  சென்னைவிமான நிலையத்திற்கு சமீபகாலமாக வெளிநாட்டில் இருந்து அபூர்வ வகை  விலங்குகள்,உயிரினங்கள் கடத்தி வரப்படுகின்றன.  கடந்தசில ஆண்டுகளில் 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன. அதிலும்கடந்த சில மாதங்களாக தொடர்ச்சி யாக மாதத்திற்கு 2 என தாய்லாந்து உள்ளிட்ட வெளி நாட்டிலிருந்து அபூர்வ வகை விலங்குகள், உயிரினங்கள் கடத்திக் கொண்டு வரப்படுகின்றன. சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதி காரிகளும், வனஉயிரின குற்றப்பிரிவு அதி காரிகளும்,அவைகளை கண்டுபிடித்து, கடத்தல்ஆசாமிகளை கைது செய்வதோடு, கடத்தி வரப்பட்ட உயிரினங்களை மீண்டும் எந்த நாட்டில் இருந்து எந்த விமா னத்தில் வந்ததோ, அதே நாட்டிற்கு அதே விமானத்தில் திருப்பி அனுப்பி வைக்கின்றனர். இதேப்போன்றுவெளி நாடு களில் இருந்து அரிய வகை, அபூர்வ உயிரினங்கள், விலங்குகள் இந்தியாவுக்குள் கடத்திகொண்டு வரப்படுவதால், வெளிநாட்டில்உள்ள நோய்க் கிருமிகள், அந்த விலங்குகள், உயிரினங்கள் மூலமாக நம் நாட்டில் பரவும் அபாயம் உள்ளது.  விலங்குகள், உயிரினங்கள் கடத்தப்படு வதை, முன்னதாகவேசுங்கத்துறையினர் மற்றும்அந்தந்த விமான நிறுவனங்களின் ஊழியர்கள்அறிந்து கொண்டு, அதை தடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். பயணிகளின் உடைமைகளில் சட்ட விரோதமாக உயிரினங்கள் எடுத்து வருகிறார்களா என்பதைரகசியமாக கண்காணிக்க வேண்டும். அவ்வாறு கொண்டு வரும் பயணிகளை, விமானத்தில் ஏறுவதற்கு முன்னதாகவே தடுத்து விட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. இதற்குவிமான நிறுவனங்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் உயர்மட்ட ஆலொசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.