சட்டவிரோத கஞ்சா விற்பனையை தடுத்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின், திருச்சி மாவட்ட அம்மாகுளம் கிளைச் செயலாளர் தவ்பீக் மீது தாக்குதல் நடத்திய பாஜக-வினரை கைது செய்ய வலியுறுத்தியும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மத்திய நிர்வாக குழு உறுப்பினர் சோமா தாஸ் மீது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் நடத்திய தாக்குதலை கண்டித்தும் சனிக்கிழமையன்று (ஜூன் 18) புரசைவாக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வாலிபர் சங்கத்தின் மத்தியசென்னை மாவட்ட பொருளாளர் ஜா.பார்த்திபன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர்கள் வி.செல்வி (மாதர் சங்கம்), கே.மணிகண்டன் (வாலிபர் சங்கம்), எஸ்.மிருதுளா (இந்திய மாணவர் சங்கம்) மற்றும் பிரியதர்ஷினி எம்.சி., உள்ளிட்டோர் பேசினர்.