புதுச்சேரி,ஜூன்.23-
உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த கோரி புதுச்சேரி தொழிலாளர் நலத்துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
புதுச்சேரியை அடுத்துள்ள சேதராப் பட்டில் இயங்கி வந்த அம்மன் ஓவன் சாக்ஸ் தொழிற்சாலை நிர்வாகம், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தில் பெற்ற கடனை செலுத்தவில்லை. இத னால், 2007 ஆம் ஆண்டு மூடப்பட்டது.
அன்றைக்கு வேலையின்றி பாதிக்கப் பட்ட 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கின் விசாரணையில், தொழிற்சாலை வங்கியின் வைப்பு நிதியில் இருந்து தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பல மாதங்களாகியும் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த நடவடிக்கை எடுக்காத புதுச்சேரி தொழிலாளர் நலத்துறையை கண்டித்து போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி காந்தி நகர் தொழிலாளர் நலத்துறை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் வெ.பெருமாள்,சிஐடியு மாநிலத் தலைவர் என். பிரபுராஜ், கவுரவத் தலைவர் குணசேகரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.