districts

img

தமிழ்நாடு முழுவதும் போதைக்கு எதிராக ஒரு கோடி கையெழுத்து பெறும் இயக்கம்

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் போதைக்கு எதிராக ஒரு கோடி கையெழுத்து பெறும் இயக்கம் நடைபெறுகிறது. அதன்ஒரு பகுதியாக கடலூர் லாரன்ஸ் சாலையில் உள்ள சிங்காரவேலர் சிலை அருகே மாவட்டத் தலைவர் சின்னத்தம்பி தலைமையில் நடைபெற்ற இயக்கத்தை சிஐடியு மாவட்டத் தலைவர் பி.கருப்பையன்  துவக்கி வைத்தார். மாநில துணைச் செயலாளர் செல்வராஜ், மாவட்ட நிர்வாகிகள் செந்தமிழ் செல்வன், அரசன், ஸ்டீபன், அசோக், மேத்தா, சலீம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.