districts

img

கோபாலபுரத்தில் பிரமாண்டமாக அமைகிறது குத்துச்சண்டை பயிற்சி மைதானம்!

சென்னையில் உலகத் தரம் வாய்ந்த மைதா னங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் சென்னையை உலக அள விலான விளையாட்டு நகரமாக நிறுவி, உலகளாவிய போட்டிகளில் சிறந்த இடமாகவும் விளை யாட்டு வீரர்களுக்கு உயர் செயல்திறன் பயிற்சி மையமாகவும் உருவாக்க திட்டமிடப்பட்டது. அந்த வகையில், இந்திய நாட்டின் விளையாட்டு தலைநகரமாக சென்னை மாநகரம் மாறியுள்ளது.  குத்துச்சண்டை மட்டுமல்ல, பொதுவாக விளையாட்டு நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் பூப்பந்து, கூடைப்பந்து, கிரிக்கெட் மற்றும் தடகளத்திற்கான உள்கட்ட மைப்பு வசதிகளை வரும் மாதங் களில் ரூ. 48 கோடிக்கு நிறுவும் பணி கள் நடைபெற்று வருவதால் விளை யாட்டுகள் மீது ஆர்வம் பெருகும். அதன் ஒரு பகுதியாக, தமிழ் நாட்டில் இருக்கும் 234 சட்ட மன்றத் தொகுதிகளில், இந்த அரசு ஏற்கனவே 61 தொகுதி களில் பல்வகையான விளையாட் டரங்கங்களை அமைத்துள்ளது. இந்த விளையாட்டரங்கில் தடகளம், கால்பந்து, கூடைப்பந்து, கையுந்து பந்து, கபடி மற்றும் அந்தந்த பகுதிகளில் உள்ள பிர பலமான விளையாட்டுகள் உட்பட குறைந்த பட்சம் ஐந்து முக்கிய விளையாட்டுக்களுக்கான மைதான வசதிகளுடன் அமைக்கப் பட்டுள்ளது.  விளையாட்டு கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் மீதமுள்ள சட்டமன்றத் தொகுதி களில் சிறு விளையாட்டரங்கம் ரூ.3 கோடி மதிப்பீட்டில் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் சிறு விளை யாட்டரங்க கட்டப்பட்டன. இந்த தொகுதி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொகுதியாகும்.

ரூ.1 கோடியில்  கிரிக்கெட் மைதானம்

இந்த நிலையில் தேனாம் பேட்டை மண்டலம், 111-வது வார்டில் உள்ள கோபாலபுரம் விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் விளையாட்டை மேம் படுத்த திட்டமிடப்பட்டது. அதற்காக இந்த மைதானத்தில் 3-ல் 2 பங்கு இடத்தில் கிரிக்கெட் விளையாட்டு மைதானம் அமைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. அதற்கான நிதியை ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏ மருத்து வர் ந.எழிலன், தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1 கோடியே 9 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளார்.

விளையாட்டுத் திடல்கள் மேம்பாடு

சென்னை மாநகராட்சி பகுதி களில் 222 விளையாட்டுத் திடல்கள் மற்றும் பூங்காக்களை மேம்படுத் தும் பணிகள் நடைபெற்று வரு கிறது. அதில், கோபாலபுரத்தில் உள்ள விளையாட்டுத் திடல் 17, 658 ச. மீ. பரப்பளவு கொண்டது ஆகும். இதில் சுமார் 6,187 ச. மீ. பரப்பளவில் தமிழ்நாடு விளை யாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் குத்துச்சண்டை மைதானம் அமைக்க அனுமதி வழங்கப்பட் டுள்ளது. மீதமுள்ள 11, 470 ச. மீ. பரப்பளவில் நடைபாதை, கழிப்பறை மற்றும் உடற்பயிற்சிக் கூடம் அமைக்கப்படும் என்றும் மேயர் பிரியா கூறியுள்ளார். இந்த நிலையில், தென் சென்னை மற்றும் மத்திய சென்னை பகுதிகளில் உள்ளவர்கள் பெரிய மேட்டில் உள்ள தமிழ்நாடு விளை யாட்டு மேம்பாட்டு ஆணையம்  மைதானத்திற்கு 14 கி.மீ பயணம் செய்து குத்துச்சண்டை கற்றுக் கொள்வதற்காக தினமும் செல்கிறார்கள்.  எனவே, ஆயிரம் விளக்கு சட்ட மன்ற தொகுதியில் உள்ள இளை ஞர்கள் குத்துச்சண்டை விளையாட்டு பயிற்சி பெறும் வகை யில், கோபாலபுரம் மைதானத்தில் ரூ.7.79 கோடி மதிப்பீட்டில் பயிற்சி மைதானம் கட்டப்பட்டு வருகிறது.  இந்த விளையாட்டு மைதானத்தில் 3-ல் ஒரு பங்கு பகுதியில் மட்டும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் குத்துச்சண்டை விளையாட்டு பயிற்சி மையம் அமைக்கப்பட உள்ளது. இந்த 2 பணிகள் முடிவடையும் போது, அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் கிரிக்கெட் விளை யாட்டுப் பயிற்சியையும், குத்துச் சண்டை விளையாட்டுப் பயிற்சியை யும், இதர வகையான விளை யாட்டுப் பயிற்சிகளையும் மேற் கொள்ள மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இப்பயிற்சி மையத்தின் கட்டிட பணிகளை இளைஞர் நலன் மற்றும்  விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  கோபாலபுரத்தில் அமையும் குத்துச்சண்டை மைதானத்தின் வடிவமைப்பு நிறைவடைந்துள்ள நிலையில், இது ஒரு வளையம் மற்றும் உள்விளையாட்டு அரங்க மாக அமைகிறது. இதில் 1,000 பேர் வரை தங்க முடியும் என்பதால் அப்பகுதி மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.