சென்னை,நவ.23- மயிலாடுதுறையைச் சேர்ந்த அபிநயா (வயது 13) எனும் சிறுமி எஸ்.எல்.இ எனப்படும் ரத்தத்தில் நச்சு அதிகம் உள்ள நோயினால் பாதிக்கப்பட்டு, இரு கால்களி லும் ரத்த ஓட்டம் தடைபட்டு மிகுந்த வலி யுடன் முன்பாதங்களும் கறுத்த நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். அதனை சரி செய்ய முடியாத நிலையில் முதலமைச்சரின் கவனத்திற்குச் சென்றதும், அவரது அறி வுறுத்தலின்படி, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கடந்த 10மாதங்களுக்கு முன்பு அனுமதிக்கப் பட்டார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தலின்படி அச்சிறுமிக்கு, ரத்த நாளஅறுவை சிகிச்சைத் துறை, ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை துறை, முடக்கு வாதவியல் துறை மற்றும் சிறுநீரக மருத்துவத் துறை போன்ற பல்வேறு உயர் சிறப்பு துறை நிபுணர்கள் இணைந்து சிகிச்சை அளித்தனர். ரத்தத்தில் உள்ள நச்சு குறைவதற்கான மருந்துகள் செலுத்தப்பட்டு அதனை சரிசெய்து, இரு கால்களின் முன்பாதங்களும் ஒன்றன் பின் ஒன்றாக அறுவை சிகிச்சை மூலமாக அகற்றப்பட்டது. அறுவை சிகிச்சை காயங்களும் நன்றாக ஆறி, தற்போது வலி குறைந்து நலமாக உள்ளார். மேலும் காயங்கள் முழுவதுமாக ஆறிய தால், வெளிநாட்டில் இருந்து பிரத்யேக மாக வரவழைக்கப்பட்ட இயற்கை கால்களைப் போன்றே உள்ள செயற்கை கால் பாதங்கள் ரூ.2,86,000 செலவில் முதல மைச்சர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்வாயிலாக வழங்கப்பட்டுள்ளது. இச்சிகிச்சையின் மூலம் சிறுமி எளிதாக நடக்கவும், அன்றாட செயல்பாடுகளை மேற்கொள்ளவும் செய்ய முடிகிறது. வியாழன்று அமைச்சர் மா.சுப்பிரமணியனை மருத்துவமனையில் சிறுமி அபிநயா மற்றும் அவரது தாய் ஆகியோர் சந்தித்து, முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்வில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன் உடனிருந்தனர்.