districts

img

நாஜி சித்தாந்தத்தை நியாயப்படுத்துவோருக்கு எதிராக வாதாட உதவும் திரைப்படம்

சென்னை, மே 6 தென்னிந்தியாவில் முதல் முறையாக ரஷ்ய திரைப்படமான "நியூரம்பெர்க்" சென்னையில் திரை யிடப்பட்டது. சமீபத்தில் வெளியான ரஷ்ய நாடகத் திரைப்படமான "நியூரம்பெர்க்" (2023) இன் பிரத்யேக காட்சியை சென்னையில் உள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில் 250க்கும் மேற்பட்டோர் பார்த்தனர். இத் திரைப்படம் மனிதகுல வரலாற்றில் ஒரு பெரிய அடை யாளத்திற்காக அர்ப்பணிக்கப் பட்டுள்ளது - தி ட்ரையல் ஆஃப் நியூரம்பெர்க். மார்ச் 2 அன்று ரஷ்யாவில் வெளியிடப்பட்டது.  இந்த நாடகம் 1945-1946 இன் சர்வதேச ராணுவ தீர்ப்பாயத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட முதல் வரலாற்று திரைப்படமாகும். சர்வதேச நீதிமன்றம் ஆக்கிர மிப்பை மிகப் பெரிய கிரிமினல் குற்ற மாக அங்கீகரித்து, ஆக்கிரமிப்புப் போரைத் தயாரித்ததற்காக, கட்ட விழ்த்துவிட்டு, லட்சக்கணக்கான அப்பாவி மக்களை அழித்ததற்காக தண்டிக்கப்பட்டது.

தோற்கடிக்கப்பட்ட நாஜி ஜெர்மனியின் பிரதிநிதிகளுக்கு எதிராக சோவியத் ஒன்றியம் மற்றும் நட்பு நாடுகளால் நியூரம்பெர்க் விசாரணை நடத்தப்பட்டது.திரைப்படத்தின் கதைக்களம் 1945 இல் நியூரம்பெர்க்கில் உள்ள சர்வதேச ராணுவ தீர்ப்பாயம் அதன் வேலையைத் தொடங்குவதில் இருந்து ஆரம்பிகிறது. தென்னிந்தியாவில் உள்ள ரஷ்ய கூட்டமைப்பின் தூதர் ஒலெக் அவ்தேவ் தொடக்க விழாவில் பேசுகையில், "நூரம்பெர்க்" திரைப்படம் வரலாற்றைப் பொய்யாக்கும் முயற்சி களை எதிர்கொள்வதில் குறிப் பிடத்தக்க பங்களிப்பை வழங்கு கிறது. நாஜி சித்தாந்தத்தை நியாயப் படுத்துவதற்கான ஒவ்வொரு முயற்சி யையும் எதிர்ப்பதற்கு இந்த திரைப்படம் உதவும் என்றார். இரண்டாம் உலகப் போரின் முடிவை மறுபரிசீலனை செய்வ தற்கும், தேசிய மற்றும் உலக வரலாற்றின் வீரமிக்க மற்றும் சோக மான நிகழ்வுகளின் நினைவைப் பாது காக்கவும் இந்த திரைப்படம் உதவும் என்றும் அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் நடிகரும் எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவன தலை வருமான ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.