districts

சென்னை முக்கிய செய்திகள்

ரிசர்வ் வங்கி  பணத்துடன் சாலையில்  நின்ற கண்டெய்னர் லாரி

புதுச்சேரி, மார்ச் 22- கடலூர் மாவட்டம், நெய்வேலி பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் சேகரிக்கப்பட்ட பணக்கட்டுகள் கண்டெய்னர் லாரியில் ஏற்றப்பட்டு, ரிசர்வ் வங்கியின் சென்னை கிளைக்கு கொண்டுசெல்லப்பட்டது.  அந்த கண்டெய்னர் லாரியில் கோடிக்கணக்கில் பணம் இருந்ததாக கூறப்படுகிறது. அந்த கண்டெய்னர் லாரிக்கு முன்னும் பின்னும் 2 கார்களில் கடலூர் போலீசார் துப்பாக்கியுடன் பாதுகாப்புக்கு சென்றனர். கிழக்கு கடற்கரை சாலையில் புதுச்சேரி மரப்பாலம் அருகே அந்த லாரி வந்து கொண்டிருந்தது. அப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படவே முன்னால் பாதுகாப்புக்கு காவல்துறையினர் சென்ற காரின் ஓட்டுநர் திடீர் பிரேக் பிடித்தார். இதனால் பின்னால் கோடிக்கணக்கான பணத்துடன் வந்த லாரி, காரின் பின் பக்கத்தில் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் கார் பலத்த சேதமடைந்தது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக காரில் இருந்த போலீசார் உயிர் தப்பினர். பொதுமக்களும் போலீசார் நடுரோட்டில் துப்பாக்கியுடன் நிற்பதை கண்டு என்ன ஏதென்று விசாரிக்க தொடங்கினர். போலீசார் உடனடியாக மாற்று வாகனம் ஏற்பாடு செய்து அதில் ஏறி, கண்டெய்னர் லாரியுடன் சென்னைக்கு பாதுகாப்புக்கு சென்றனர்.

வேகமாக ஐஸ் தயாரிக்கும்  குளிர்சாதன பெட்டி அறிமுகம்

சென்னை, மார்ச் 22- வீட்டு உபயோக பொருட்களை உற்பத்தி செய்யும்  ஹேவெல்ஸ் இந்தியா நிறுவனம் லாயிட்  என்ற பெயரில் புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்துள்ளது. இவை அனைத்தும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட சாதனங்கள் ஆகும். ஸ்டெல்லர் அன்ட் ஸ்டைலஸ் குளிர்சாதனத்தை அறிமுகம் செய்ததோடு அதன் 29 நிமிடங்களில் வேகமாக ஐஸ் தயாரிக்கும் குளிர்சாதன பெட்டியையும் (பிரிட்ஜ்) நோவண்டே  என்ற பெயரில் டாப் லோட் வாஷிங் மெஷின் மற்றும் தொலைதூர தொழில்நுட்பத்துடன் கூடிய 85 முதல் 100 இன்ச் வரையிலான புதிய கூகுள் க்யூஎல்இடி டிவி ஆகியவற்றையும் அறிமுகம் செய்துள்ளது.  சென்னைக்கு அருகே ஸ்ரீ சிட்டி சிறப்பு பொருளாதார மண்டலத்தில் குளிர்சாதனங்களை உற்பத்தி செய்யும் புதிய ஆலையை ஹேவெல்ஸ் இந்தியா தொடங்கியுள்ளது. இந்த ஆலையில் ஆண்டுக்கு 10 லட்சம் குளிர் சாதனங்களை உற்பத்தி செய்ய இலக்குநிர்ணயித்துள்ளதாக நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் யோகேஷ் குமார் குப்தா தெரிவித்துள்ளார்.

'தேர்தலில் அலட்சியமாக செயல்படாதீர்கள்' அதிகாரிகளுக்கு ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்

சென்னை, மார்ச் 22- தேர்தல் தொடர்பான பணிகளில் அலட்சியமாக செயல்படக்கூடாது என சென்னை மாவட்ட தேர்தல் அலு வலர் ராதாகிருஷ்ணன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி யுள்ளார். 18வது நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா முழுவதும் ஏப்.19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதிவரை ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரி யில் ஒரே கட்டமாக ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடை பெறவுள்ளது. சென்னை மாநகராட்சி அலுவலகம் அம்மா மாளிகை யில், வருமானவரித்துறை, ஊடகச் சான்று, போலீசார் மற்றும் வங்கி அதிகாரிகள், தேர்தல் கண்காணிப்பு குழுவி னர் ஆகியோருடன் தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன்  வியாழக்கிழமை ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பேசிய ராதாகிருஷ்ணன், "தேர்தல் தொடர்பான பணிகளில் அலட்சியமாக செயல்படக்கூடாது. இது நீங்கள் பணியாற்றும் முதல் தேர்தல் அல்ல; இதற்கு முன் தேர்தல்களை சந்தித்திருப்பீர்கள். எனவே, எந்த பயமும் இல்லாமல் தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார். சென்னை மாவட்டத்தில் தேர்தல் பணிகள் அனைத்தும் சுமுகமாக நடைபெற்று வருகிறது. கூடுதல் ஆணை யாளர்கள் மூலம் தேர்தல் பணிகள் அனைத்தும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதேபோல், தேர்தல் பணப்பட்டுவாடா உள்ளிட்டவைகளை தடுக்க தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்று தெரிவித்தார்.

தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணம்  வசூலிப்பதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு

சென்னை, மார்ச் 22-  தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற உத்தரவிடக் கோரி திருப்பூர் மாவட்டம்  அவிநாசியில் வசிக்கும்  கருப்பசாமி என்பவர்  சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல  வழக்கு ஒன்றை  தாக்கல் செய்துள்ளார். அந்த  மனுவில்  நாட்டில் ஓடும் வாக னங்கள் எல்லாம்  கட்டணம் செலுத்தி  பர்மிட்  பெற்றும்  சாலை வரி செலுத்தியும் ஓடி க்கொண்டிருக்கிறது  எனவே தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள  கட்டண சாவடிகளில்  வாகனங்களுக்கு  உப யோகிப்பாளர் கட்டணம்  வசூலிக்க கூடாது என்று  கோரிக்கை விடுத்துள்ளார்  கட்டணம் வசூலிப்பதற்கு  தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு அதிகாரம் அளிக்கும் தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிகள் 2008   எனும் சட்டத்தின் கட்டண சேகரிப்பு 6  ன்  உட்பிரிவுகள் 1,2,3,5,6, 7  ஆகியவை செல்லாது என அறிவிக்க  வேண்டுமென  மனுவில் கோரியுள்ளார். இந்த மனுமீதான விசாரணை கடந்த 18ஆம் தேதி தலைமை நீதிபதி தலை மையிலான முதன்மை அமர்வில் நடை பெற்றபோது தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சார்பிலும்  மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை  சார்பிலும்  இரண்டு வழக்கறிஞர்கள் ஆஜரானார்கள். அவர்கள் ஒன்றிய அரசின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்டதால் வழக்கு விசாரணை ஏப்ரல் 25ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.    இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி வெளியான  திமுகவின்  தேர்தல் அறிக்கை யில்  தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சாவடிகள் அகற்றப்படும்  என்று அறிவித்திருப்பதும் வெள்ளியன்று வெளியான அதிமுகவின்  தேர்தல் அறிக்கையிலும்  இதே விஷயம்  அறிவிக்கப்பட்டிருப்பதும்  வரவேற்கத் தக்கது என்று மனுதாரர் கூறியுள்ளார்.

எண்ணூரில் வாலிபர் வெட்டிக்கொலை

எண்ணூரில் வாலிபர் வெட்டிக்கொலை சென்னை, மார்ச் 22- எண்ணூரில் வாலிபர் வெட்டி கொலை செய்யப் பட்ட வழக்கில் நண்பர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர். எண்ணூர் ஆதிதிரா விடர் காலனியில் வசித்த வர் பவுல்ராஜ் (19). இவர் தனது தந்தையுடன் கட்டிடப் பணியில் கூலி வேலை செய்து வந்தார். இவர் வியாழக்கிழமை நள்ளி ரவு எண்ணூர் தாழங்குப்பம் காலி மைதானத்தில் 4 நண்ப ர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது பவுல்ராஜை சில மர்ம நபர்கள் கொலை செய்துள்ளனர். இதில் அவருக்கு முகம், கை, கால்கள் என 5 இடங்களில் வெட்டு காயங்கள் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்த தகவல் எண்ணூர் காவல் துறை யினருக்கு வெள்ளிக்கிழமை காலையில் தான் தெரிய வந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் பவுல்ராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பவுல்ராஜ் அதே பகுதியைச் சேர்ந்த இளம் பெண்ணை காதலித்து வந்ததும், பெண்ணின் குடும்பத்திற்கு இதில் விருப்பம்  இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. இத னால் இளம்பெண்ணின் அண்ணன் பவுல்ராஜை வெட்டிக் கொலை செய்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் காவல் துறையினர் விசா ரணை நடத்தி வருகின்ற னர். மேலும் இது தொடர் பாக குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

அனைவரும் வாக்களிக்க வேண்டும்  என்று எப்படி கட்டாயப்படுத்த முடியும்?:  உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை, மார்ச் 22- தேர்தல் நாளில் விடுமுறை வருவதால் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று எப்படி கட்டாயப்படுத்த முடியும்? என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த மனுவில், வேலை காரணமாக வாக்குரிமையை யாரும் இழந்து விடக் கூடாது என்பதற்காக, தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடு முறை அளிக்கும் வகையில் மக்கள் பிரதி நிதித்துவ சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதனால் வர இருக்கும் மக்களவை தேர்தலில், வாக்குப்பதிவு நாளில் அரசு, தனி யார் நிறுவனங்களுக்கும் பொது விடு முறை அறிவித்து தேர்தல் ஆணை யம் உத்தரவிட்டிருக்கிறது. அதன்படி விடு முறை வழங்காத தனியார் நிறு வனங்க ளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படு கிறது. ஆனால், இந்த விடுமுறையை பயன்படுத்தி தொழி லாளர்கள் வாக்க ளித்தார்களா? என சரிபார்க்க எந்த நடை முறையும் இல்லை. அதனால் தேர்தல் நாளில் ஊதியத்துடன் விடுமுறையை பெற, வாக்களித்ததற்கான சான்றை சமர்ப்பிப்பதை கட்டாயமாக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் தேர்தல் நாளில் வாக்களிக்க விரும்பாமல் வேலை செய்ய விரும்பினால் சம்பந்தப்பட்ட தொழி லாளியை தனியார் நிறுவனம் வேலை செய்ய அனுமதிக்குமா என கேள்வி எழுப்பினர். இதற்கு மனுதாரர் தரப்பில் எந்த பதிலும் அளிக்கப்படாததை அடுத்து, வாக்க ளிக்க வேலை தடையாக இருக்கக் கூடாது; தொழிலாளர்கள் வாக்களிக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் விடு முறை அறிவிக்கப்படுகிறது. வாக்க ளிக்க வேண்டும் என எப்படி ஒருவரை கட்டாயப் படுத்த முடியும்? தேர்தல் நாளில் ஊதி யத்துடன் விடுமுறை பெற, வாக்களிப்ப தற்கான சான்று சமர்ப்பிப்பதை கட்டாய மாக்க வேண்டும் என தேர்தல் ஆணை யத்துக்கு உத்தரவிட முடியாது எனக் கூறி நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.

திருப்பாதிரிப்புலியூரில்  ரூ. 7 லட்சம் பறிமுதல்

கடலூர், மார்ச் 22- கடலூர் குடிமை பொருள் தனி வட்டாட்சியர் ஜெயக்குமார் தலைமையிலான பறக்கும் படை அதிகாரி கள் வெள்ளி கிழமை காலை கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சின்னவாணியர் வீதி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை மறித்து சோதனை செய்தபோது, அதில் ரூ.7 லட்சம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த நபரிடம் விசாரணை நடத்தியதில் அவர் கடலூர் கூத்தப்பாக்கம் பகுதியை சேர்ந்த மகேஷ் என்பதும், உரிய ஆவணம் இன்றி பணத்தை கொண்டு செல்வதும் தெரிய வந்தது. இதையடுத்து பறக்கும் படை அதிகாரிகள், மகேஷிடம் இருந்த ரூ.7 லட்சத்தை பறிமுதல் செய்து உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியும் கோட்டாட்சியருமான அபிநயாவிடம் ஒப்படைத்தனர்.

ஓசூரில் முதலுதவி  விழிப்புணர்வு முகாம்

கிருஷ்ணகிரி, மார்ச் 22-  இந்திய மருத்துவ சங்க ஓசூர் கிளை சார்பில் அவசர கால முதலுதவிகள் குறித்து செய்முறை, சிபிஆர் பயிற்சி முகாம் ஓசூா் பேருந்து நிலையத்தில் வெள்ளியன்று   நடைபெற்றது.  மாரடைப்பு,தலையில் அடி,கை, கால் எலும்பு முறிவு, பக்கவாதம்,வலிப்பு ஏற்படும் நபர்களுக்கு உடனடி யாக அருகில் இருப்பவர்கள் செய்ய வேண்டிய உயிர்  காக்கும் விதமாக முக்கியமான முதலுதவி சிகிச்சைகளைப் பற்றி மருத்துவர்கள் செய்முறை பயிற்சி அளித்தனர். முகாமிற்கு மருத்துவர்கள். தலைவர் எம்.செந்தில், செயலாளர் பி.சி சந்திரசேகர், நிதிச் செயலாளா் ஆர்மௌலி தரன் தலைமை தாங்கினர். குணம் மருத்துவமனை மருத்துவர் பிரதீப் குமார்,லட்சுமி மருத்துவமனை மருத்துவர் ரங்கராஜ், மற்றும் கவிதா, ஞான மீனாட்சி, தனசேகா், விஷ்ணு, ரமேஷ், கதிரவன், மஞ்சுநாத், விவேக் ஆகியோர்  கலந்து கொண்டனர்.