districts

குப்பை இல்லா நகரமாக சென்னையை மாற்றத் திட்டம்

சென்னை,டிச. 6- சென்னையில் உள்ள 15 மண்ட லங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளை குப்பைகள் அற்ற பகுதி களாக சென்னை மாநகராட்சி அறிவிக்க உள்ளது.  திடக்கழிவு மேலாண்மை முயற்சி களுக்கு ஆதரவளிக்க பொதுமக்கள் மற்றும் வணிகர்களை ஊக்குவிக்க ஒவ்வொரு மண்டலத்திலும் குறைந்தது ஒன்று அல்லது 2 குப்பை இல்லாத பகுதிகளை தொடங்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு குழுவில் திடக்கழிவு மேலாண்மை துறையின் மண்டல உதவி செயற் பொறியாளர் தலைமையில் பாது காப்பு ஆய்வாளர்கள், பாதுகாப்பு மேற்பார்வையாளர்கள், உரிம  ஆய்வாளர்கள், அனிமேட்டர் மேற்பார் வையாளர்கள் ஆகியோர் இருப்பார் கள். வருகிற 21-ந்தேதிக்குள் அனைத்து  மண்டலங்களிலும் இந்த கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்படும். இவர் கள் சட்டவிரோதமாக குப்பை கொட்டும்  இடங்களை கண்டறிந்து அந்த இடங் களில் குப்பை கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிப்பார்கள்.  மேலும் குப்பைகளை பிரித்து அகற்றுவதற்காக 2 தொட்டிகளை வைக்க தவறிய கடைகள் கண்காணிப்பு குழுவினரால் கண்காணிக்கப்படும். சென்னை மாநகராட்சியில் 45 ஆயிரம் கடைகளில் குப்பைகளை பிரிக்கும் பணி தொடங்கப்பட்டு குப்பைகளை அகற்ற 2 தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் 30 ஆயிரம் கடைகளில் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். மழை நீர் வடிகால் வாய்களில் குப்பை களை கொட்டக்கூடாது என்று கடைக் காரர்களுக்கு அறிவுறுத்தப்பட் டுள்ளது. குப்பை இல்லாத இடங்களை  உருவாக்க அதிக அளவில் பாதுகாப்பு பணியாளர்களும் நியமிக்கப்பட உள்ளனர்.