விழுப்புரம், ஜூன் 14-
கல்விக்கடனை முழுமை யாக செலுத்தியதற்கான தடை யில்லா (என்ஓசி) சான்று வழங்காமல் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியை அலைக் கழித்த தனியார் வங்கி இழப்பீடாக ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும் என்று விழுப்புரம் நுகர்வோர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், திரு வெண்ணெய்நல்லூர் வட்டம், சித்தலிங்கமடத்தை சேர்ந்தவர் வாசுதேவன் (64). இவர் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி. இவருடைய மகள் ஸ்ரீபிரியாவின் கல்லூரி படிப்புக்காக தனியார் வங்கி ஒன்றில் வருடத்திற்கு ரூ.35 ஆயிரம் வீதம் 4 ஆண்டு களுக்கு ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் கல்விக்கடன் வாங்கி யிருந்தார்.
ஸ்ரீபிரியா படிப்பு முடிந்ததும் வங்கியில் வாங்கிய கடன் முழுவதையும் வட்டியுடன் சேர்த்து 1 லட்சத்து 91 ஆயிரத்து 71 ரூபாய் வாசு தேவன் செலுத்திவிட்டார். கடன் தொகை முழுவதையும் செலுத்தியதற்கான என்.ஓ.சி. சான்றிதழ் தரும்படி வங்கி அதிகாரிகளிடம் வாசுதேவன் கேட்டுள்ளார். அதற்கு அங்கி ருந்த அதிகாரிகள், கல்விக் கடன் தருவதுதான் தங்கள் வேலை, என்.ஓ.சி. சான்றை இங்கு தர முடியாது என்றும், திருச்சி அல்லது புதுச்சேரியில் உள்ள வங்கிக் கிளையை அணுகுமாறும் கூறியுள்ளனர்.
அதன்படி வாசுதேவன், புதுச்சேரியில் உள்ள வங்கி கிளைக்கு சென்று சான்றிதழ் தரும்படி கேட்டுள்ளார். அதற்கு அங்கிருந்த அதிகாரிகள் ரூ.40 ஆயிரம் கட்டினால்தான் சான்றிதழ் வழங்கப்படும் என்று கூறி அலைக்கழித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் கடந்த 27.2.2020 அன்று வாசுதேவன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நுகர்வோர் குறை தீர் ஆணையத் தலைவர் சதீஷ்குமார், உறுப்பினர்கள் மீராமொய்தீன், அமலா ஆகியோர் விசாரித்து வந்த நிலையில், தற்போது இந்த வழக்கில் தீர்ப்பு கூறியுள்ளனர்.
அந்த தீர்ப்பில், வாசு தேவன், தனது மகளின் படிப்புக்காக வாங்கிய கல்விக்கடனை முழுவதுமாக திரும்ப செலுத்திவிட்டதால் அதற்குரிய சான்றிதழை சம்பந்தப்பட்ட விழுப்புரம் வங்கிக் கிளை மேலாளர் வழங்க வேண்டும்.
மேலும் வங்கியின் சேவை குறைபாட்டிற்கும், அதன் மூலம் மனுதாரர் வாசு தேவனுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கும் இழப்பீடாக ரூ.20 ஆயிரமும், வழக்கு செலவுத் தொகையாக ரூ.5 ஆயிர மும் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.