விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டில் கள்ளச்சாராயம் குடித்து பலியோனோர் குடும்பத்திற்கு நிவாரணமாக 75 வயது முதியவர் ஒருவர் தான் யாசகம் பெற்ற தொகைரூ. 10 ஆயிரத்தை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் செவ்வாயன்று (மே-23), வழங்கினார். இவர் ஏற்கெனவே பல்வேறு மாவட்டங்களில் யாசகம் கேட்டு இதுவரை ரூ.55 லட்சம் பணத்தை அரசுக்கு பொது நிவாரண நிதியாக வழங்கி வருவதாக கூறப்படுகிறது. மக்கள் நலனுக்காக யாசகம் பெற்ற தொகையை கடைசியாக ஆட்சியர் மூலம் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு கொடுத்தார்.