பொன்னேரி,ஜூன் 9-
மீஞ்சூரை அடுத்த கல்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட நரிக்குறவர் காலனியை சேர்ந்தவர் அஜித் (வயது 25). 3 மாத கர்ப்பிணியான இவரது மனைவி ஐஸ்வர்யா (22) உடன் மோட்டார் பைக்கில் மீஞ்சூரை அடுத்த பட்ட மந்திரி சாலையில் இருந்து வீடு நோக்கி வந்து கொண்டு இருந்தார்.
அப்போது பின்னால் சாம்பல் கழிவுகளை ஏற்றிக் கொண்டு வந்த லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அஜித், அவரது மனைவி ஐஸ்வர்யா வும் லாரியில் சிக்கி நசுங்கி னர். சம்பவ இடத்திலேயே ஐஸ்வர்யா இறந்தார். அவரது கணவர் அஜித் படு காயம் அடைந்தார்.
விபத்து நடந்ததும் லாரியை நிறுத்தி விட்டு ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார். தகவல் அறிந்த காவல் துறையினர் வந்து மீட்பு பணி யில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்த அஜித்துக்கு சென்னை ஸ்டான்லி மருத்து வமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். இந்நிலையில் வியாழனன்று இரவு இறந்த ஐஸ்வர்யாவின் உடலைப் பெற்றுக்கொண்ட உறவி னர்கள் நரிக்குறவர்கள் காலனி அருகே மீஞ்சூர்- காட்டூர் சாலையில் உடலை வைத்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். லாரி ஓட்டுநரை கைது செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த னர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அதிகாரிகள் உறுதி அளித் ததன் பேரில் போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.