கள்ளக்குறிச்சி, பிப். 17 - கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3வது கல்லை புத்தகத் திருவிழா பிப். 14 அன்று தியாக துருகம் சாலையில் உள்ள வி.எம், திடலில் துவங்கியது. இந்த திருவிழா பிப். 23 ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. மூன்றாம் நாளான பிப்.16 அன்று பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள்,கலை நிகழ்ச்சிகள் மற்றும் உள்ளூர் நட்சத்திர பேச்சாளர்கள் சொற்பொழிவுகள் வெகு சிறப்பாக நடைபெற்றது. மூன்றாவது நாளில் மட்டும் 52,288 பேர் கலந்து கொண்டு ரூ.7,28.545 மதிப்பீட்டிலான புத்தகங்கள் வாங்கிச் சென்றுள்ளனர். கடந்த மூன்று நாட்களில் 97. 648 நபர்கள் கலந்து கொண்டு ரூ.12.88.703 மதிப்பீட்டிலான புத்தகங்கள் வாங்கிச் சென்று உள்ளனர்.மேலும் புத்தகத் திருவிழாவில் அமைக்கப்பட்டுள்ள கோளரங்கத்தை 1,650 மாணவர்கள் பார்வையிட்டுள்ளனர். புத்தகத் திருவிழா வில் அமைக்கப்பட்ட மருத்துவ முகாமில் 89, பெண்கள் 112 ஆண்கள் மூன்றாம் நாள் வரை மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர் என்று மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.