சென்னை, நவ.18- சென்னை மாநகராட்சியால் 387 கி.மீ. நீளமுள்ள 471 பேருந்து சாலைகளும், 5270 கி.மீ. நீளமுள்ள 34,640 உட்புறச் சாலைகளும் பராமரிக்கப்பட்டு வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சிக் குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட மாநகராட்சியின் மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் பிற சேவைத் துறைகளான மின்சாரத்துறை, சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சீரமைப்புப் பணிகள் மற்றும் பருவமழை ஆகியவற்றின் காரணமாக சாலைகளில் ஆங்காங்கே சிறு பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. பாதசாரிகள் மற்றும் சாலைப் போக்கு வரத்திற்கு இடையூறாக உள்ள இந்தச் சாலைப் பள்ளங்களை சீரமைக்க மாநக ராட்சியின் சார்பில் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன. மாநகராட்சியின் 200 வார்டுகளிலும் தொடர்புடைய உதவிப் பொறியாளர் இரவு நேரங்களில் சாலைகளில் ஆய்வு மேற்கொண்டு ஏற்பட்டுள்ள பள்ளங்களை கணக்கீடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு களின் அடிப்படையில் 2,646 சாலைகளில் 1,07,165 சதுர மீட்டர் பரப்பளவில் 10,553 பள்ளங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தப் பள்ளங்களை சீர்செய்யும் பணி கள் துரிதமாக நடைபெற்று வருகிறது. 17.11.2022 வரை 79,305 சதுர மீட்டர் பரப் பளவில் 9,035 பள்ளங்கள் சீர்செய்யப் பட்டுள்ளது.