கிருஷ்ணகிரி, ஆக. 9- ஊத்தங்கரை வட்டம் முத்துநாயக்கன்பட்டி கிராமத்தில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமை ஆய்வு செய்வதற்காக அமைச்சர் செஞ்சி மஸ்தான் வந்திருந்தார். அப்போது அருகில் உள்ள கொடுக்காரண்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கற்பூர சுந்தர பாண்டியன் 4 வயது மகன் பிடல் காஸ்ட்ரோ, அடுத்த ஆண்டு கல்வி கட்டணத்திற்காக தன் உண்டியலில் சேர்த்து வைத்திருந்த ரூ. 10 ஆயிரத்தை கேரள மாநிலம் வயநாடு பேரிடர் மீட்பு நிதிக்காக மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு முன்னிலையில் அமைச்சர் செஞ்சி மஸ்தானிடம் நிதியாக வழங்கினார்.