சென்னை, மார்ச் 2- சென்னையில் மின்சார ரயில் பயணி களின் வசதிக்காக இன்று (மார்ச் 3) முதல் 4 புதிய மின்சார ரயில் சேவைகளை தெற்கு ரயில்வே அறிமுகம் செய்கிறது. சென்னையில், சென்னை கடற்கரை - தாம்பரம், சென்னை சென்ட்ரல் - திரு வள்ளூர், தாம்பரம் - செங்கல்பட்டு, அரக்கோணம் - கும்மிடிப்பூண்டி ஆகிய வழித் தடங்களில் தினசரி 600க்கும் மேற்பட்ட மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படுகிறது. சென்னையில் வசிக்கும் மக்களுக்கு மிக முக்கிய பொது போக்குவரத்து சேவையாக மின்சார ரயில் சேவை இருந்து வருகிறது. மாநகர பேருந்துகள், மெட்ரோ ரயில்கள் குறிப்பிட்ட வழித்தடங்களில் மட்டுமே இயக்க ப்படுவதால் சென்னை மற்றும் சென்னை யின் புறநகர் பகுதிகளில் வசிக்கும் பொது மக்களுக்காக பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்களை தினசரி பல்லாயிரக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தெற்கு ரயில்வே 4 புதிய ரயில் சேவைகளை முக்கிய வழித்தடங்க ளில் அறிமுகம் செய்ய உள்ளது.திங்கட்கிழமை (மார்ச் 3) முதல் காலை 11.15 மணிக்கு மூர்மார்க்கெட் ஆவடி இடையே ஒரு மின்சார ரயில் சேவையும், காலை 5.25 மணிக்கு ஆவடி மூர் மார்க்கெட் இடையே ஒரு மின்சார ரயில் சேவையும், இரவு 10.35 மணிக்கு மூர் மார்க்கெட் கும்மிடிப் ்பூண்டி மற்றும் காலை 9.10 மணிக்கு கும்மி டிப்பூண்டி மூர் மார்க்கெட் இடையே ரயில் சேவையும் அறிமுகப்படுத்தப்பட உள்ள தாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.