districts

கடல்நீரை குடிநீராக்கும் 3-வது ஆலை அமைக்கும் பணி தொடக்கம்

மாமல்லபுரம்,மே 18-

   மாமல்லபுரம் அடுத்த சூலேரிக்காடு கிழக்கு கடற்கரை சாலையில் கடல்நீரை குடி நீராக்கும் ஆலை செயல்பட்டு வருகிறது.  

   இந்த ஆலை கடந்த 2013-ம் ஆண்டு 1 கோடி லிட்டர் குடிநீரை உற்பத்தி செய்யும்  வகையில் தொடங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சென்னையின் குடிநீர் பற்றாக்குறையை குறைக்கும் வகையில் சூலேரிக்காட்டில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் ஆலையில் 2-வது ஆலை கட்ட முடிவு செய்யப்பட்டது. ரூ.1,260கோடி செலவில், 15 கோடி லிட்டர் குடிநீர் உற்பத்தி  செய்யும் வகையில் 2-வது புதிய ஆலை  கட்டுமான பணிகள் கடந்த சில ஆண்டு களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

   தற்போது 2-வது ஆலை கட்டுமான பணிகள்  85 விழுக்காடு முடிந்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த 2-ஆவது ஆலை  பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிகிறது. இதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.   சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம், ஜப்பான் நாட்டு பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதியுடன் இணைந்து சூலேரிக்காடு கடல்  நீரை குடிநீராக்கும் ஆலையில் 400 மில்லி யன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட நவீன  3-வது ஆலையை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதற்கான முதற்கட்ட பணிகள் தொடங் கப்பட்டுள்ளன. அப்பகுதியில் தற்காலிக அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. மேலும் நவீன கருவிகளுடன் கடல் நீர் நிலை  ஆய்வு, மணல் தன்மை, குழாய்கள் பதிக்கும்  பகுதி, மீன்வளப் பாதுகாப்பு, இயற்கை சூழல், மாசுபாடு, வனவளம் உள்ளிட்ட பகுதி களை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

  இந்த ஆலையில் புதிதாக தொடங்கப்படஉள்ள 2-வது மற்றும் 3-வது ஆலை முழுபயன்பாட்டுக்கு வரும்போது சென்னை நகர மக்களின் 70 விழுக்காடு குடிநீர்  தேவை பூர்த்தியாகும் என்று தெரிகிறது.