districts

தீபாவளி திருடர்கள் 300 பேர் ஊடுருவல்

சென்னை,அக்.20- தீபாவளிக்கு இன்னும் 2 நாட்களே இருக்கும் நிலையில் தி.நகர் உள்ளிட்ட வணிக பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி ‘பிக்பாக்கெட்’ மற்றும் ‘செயின்’ பறிப்பு கொள்ளையர்கள் ஒருசில இடங்களில் கைவரிசை காட்டியுள்ளனர்.  அதேபோல் வணிக பகுதிகள் பலவற்றிலும் வழிப்பறி கொள்ளை யர்கள் கைவரிசை காட்டி வரு கிறார்கள்.  இந்நிலையில் தீபாவளி கூட்டத்தை பயன்படுத்தி செயின் பறிப்பு, பிக்பாக்கெட் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவதற்கு திட்டமிட்டு ஆந்திர மாநிலத்தில் உள்ள கே.வி.குப்பம், திருச்சி ராம்ஜி நகர், வேலூர், பேரணாம்பட்டு, மதுரை மேலூர் ஆகிய வெளியிடங்களில் இருந்து 300 கொள்ளையர்கள் வந்து சென்னையில் பதுங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.  இதனை கருத்தில் கொண்டு சென்னை மாநகர் முழுவதும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் காவல்துறையினர் உஷார்படுத்தப் பட்டு தீவிர கண்காணிப்பபில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.