districts

சென்னை அருகே ரூ.300 கோடியில் தாவரவியல் பூங்கா: அமைச்சர்

சென்னை, ஏப் .25- சென்னை அருகே ரூபாய் 300 கோடி செலவில் தாவரவியல் பூங்கா ஒன்று அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் கா. ராமச்சந்திரன் தெரிவித்தார். வனத்துறை கொள்கை விளக்க குறிப்பு தாக்கல் செய்து உரையாற்றிய அமைச்சர்,"அறிவியல் மேலாண்மை மற்றும் வாழ்விட பாதுகாப்பு மூலம் யானைகள் பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்துவதில் முன்னோடி மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று" என்றார். யானைகள் அதிகம் உள்ள தொடர்ச்சி யான நிலப்பரப்பு அமைப்புகள், மேலாண்மை யானைகள் காப்பகம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு சட்ட வழியாக அங்கீகாரம் ஏதும் இல்லை. நாட்டிலுள்ள நான்கு யானை கள் காப்பகங்களில் யானைகள் மற்றும் அவற்றின் வாழ்விடங்களை பாது காக்கும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றும் அமைச்சர் கூறினார். தாவரவியல் பூங்காக்கள் பல் உயிரி னங்களின் திரைப்படங்களாகவும் பொது மக்களுக்கு பொழுதுபோக்கு மையங்களாகவும் திகழ்கின்றன. லண்டனில்  உள்ள கியூ கார்டன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ரூபாய் 300 கோடி செலவில் சென்னைக்கு அருகில் தாவரவியல் பூங்கா அமைக்கப்படும் என்றும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். அலையாத்திக் காடுகள் மற்றும் பவளப்பாறைகள் பாதுகாக்கப்படும். சென்னையில் கடல் ஆமைகள் பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையம் ஏற்படுத்தப்படும். அடையாறு கூவம் ஆறுகள் மற்றும் பக்கம் கால்வாய் ஆகியவற்றின் கரைகளில் பசுமை தோட்டங்கள் உருவாக்கப்படும். நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் சோலைக்காடுகள் பாதுகாப்பு மையம் அமைக்கப்படும். சூழல் சுற்றுலா சுற்று தடங்கள் புதிதாக ஏற்படுத்தப்படும் உள்ளிட்ட பல அறிவிப்புகளை அமைச்சர் ராமச்சந்திரன் வெளியிட்டார்.