செங்கல்பட்டு, ஜூலை 24- சர்வாதிகாரத்தை நிலைநிறுத்தும் 3 குற்றவியல் நடைமுறை சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கம் சார்பில் செங்கல்பட்டு தலைமை தபால் நிலையம் முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொமுச மாநிலச் செயலாளர் இரா. பொண்ணு ராம் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் ஜஹாங்கீர், சிஐடியு மாவட்ட செயலாளர் பகத்சிங் தாஸ், தொமுச மாவட்ட செயலாளர் ஜே கண்ணன், ஏஐசிசிடியு மாநில சிறப்பு தலைவர் இரா.இரணியப்பன், ஐஎன்டியுசி மாவட்டச் செயலாளர் மூர்த்தி, எல்டி யூசி மாநிலத் தலைவர் கோபால், டபிள்யூயூஎம் நிர்வாகி பாஸ்கர், அகில இந்திய வழக்கறி ஞர்கள் சங்க மாநில குழு உறுப்பினர் ஜே.பிர தாபன் உள்ளிட்ட பலர் பேசினர். காஞ்சிபுரம் காஞ்சிபுரம் மாவட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஏஐடியுசி மாவட்ட பொதுச்செயலாளர் ஏ.மூர்த்தி தலை மையில் புதனன்று (ஜூலை 24) காஞ்சிபுரம் பெரியார் தூண் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் எல்.பி.எஃப் நிர்வாகிகள் இரா.பொன்னுராம், கே.எ.இளங்கோவன், சிஐடியு நிர்வாகிகள் இ.முத்துக்குமார், டி.ஸ்ரீதர், ஆர்.மதுசூதனன், வழக்குரைஞர் ஜெ.பிர தாபன், ஏஐடியுசி பா.கார்த்திக், இ.பிரகா சம், ஐஎன்டியுசி நிர்வாகிகள் இராம நீராளன், எல்.என்.பிரவீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.