districts

img

புதுச்சேரியில் அரசுப் பள்ளி சுவர் இடிந்து 3 மாணவர்கள் படுகாயம்

புதுச்சேரி, பிப்.12- புதுச்சேரியில் அரசுப் பள்ளி சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் படுகாயமடைந்தனர். புதுச்சேரி தவளக்குப்பம் அடுத்த புதுகுப்பத்தில் அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. 1991 ஆம் ஆண்டு கட்டப்பட்ட பள்ளி கட்டிடத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை மாணவர்கள் படித்து வருகிறார்கள். இப்பள்ளி கட்டிடம் மிகப் பழமை யான நிலையில் உள்ளதால்,  வகுப்பறைகள் சிதலமடைந்து காரை சுவர் பெயர்ந்து விழுந்து வருகிறது. இது தொடர்பாக மாணவர்களின் பெற்றோர்கள்  பலமுறை கல்வித்துறைக்கு தகவல் தெரிவித்தும் சீரமைக்கப்படவில்லை.  இந்த நிலையில், புதன்கிழமை (பிப்.12) பள்ளி வளாகத்தில் உள்ள குடிநீர்  குழாய்க்கு தண்ணீர் பிடிக்க மாணவர்கள் சென்ற போது அதன் சுவர்  திடீரென இடிந்து விழுந்தது. இதில் 3 மாணவர்கள் படுகாயமடைந்தனர். உடனடியாக மாணவர்களை  மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.