districts

விழுப்புரம் மாவட்டத்தில் இரட்டை கொலை வழக்கில் 3 பேர் கைது

விழுப்புரம், ஜூன்.15-

    விழுப்புரம் மாவட்டம், மயிலம் காவல் நிலையத்தில் கடந்த 10 ஆம் தேதி வழக்கு தொடர்பாக கையெழுத்து போட வந்த இருவரை வழியில் மறித்து படுகொலை செயத வழக்கில் மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    புதுவை மாநிலம் வில்லியனூர் அருகே உள்ள பிள்ளையார்குப்பம் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் (28). கோர்க்காடு பகுதியை சேர்ந்தவர் அன்பரசன் (32). ரவுடிகளாக வலம் வந்த இவர்கள் கடந்த மார்ச் மாதம் மயிலம் பகுதியில் கஞ்சா விற்றதாக காவல்துறை யினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.  

   பின்னர் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த அவர்கள் தினமும் காலை மயிலம் காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டு வந்தனர். அதன்படி கடந்த 10 ஆம் தேதி 2 பேரும் பிள்ளையார்குப்பத் தில் இருந்து இருசக்கர வாகனத்தில் லிங்கா ரெட்டிபாளையம் வழியாக மயிலத்திற்கு சென்று கொண்டிருந்தனர்.  

   அப்போது, வானூர் அருகே செங்கமேடு-திருவக்கரை சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, மூன்று இருசக்கர வானத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் விரட்டி சென்று அருண்குமார், அன்பரசன் வாகனத்தின் மீது மோதினர். இதில் நிலை தடுமாறி  இருவரும் கீழே விழுந்தனர்.  

   அப்போது அன்பரசனை சுற்றி வளைத்து அந்த கும்பல் சரமாரியாக  தலை, கழுத்து உடலில் பல்வேறு இடங்க ளில் பலத்த வெட்டியதால் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார்.

   இதற்கிடையே தப்பியோடிய அருண்குமாரையும் அந்த கும்பல் விரட்டியது. சுமார் 1 கி.மீ. தூரம் ஓட, ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்தது.

   இதுகுறித்து வானூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இதில் புதுச்சேரி ஸ்ரீகாந்த் (21), வழுதாவூர் ஜெகன் (23), வி.மாத்தூர் வீர செழியன் (23) ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.