கல்குவாரி குட்டையில் மூழ்கி 3 பேர் பலி
திருத்தணி,மே 9- திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த சந்தை வாசல் பகுதியை சேர்ந்தவர் நரசிம்மன். இவரது மனைவி மல்லிகா (வயது 65). இவரது உறவினரான திருத்தணி பெரியார் நகரில் வசித்து வந்த முதியவரின் இரங்கல் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மல்லிகா மற்றும் அதே பகுதியை சேர்ந்த உறவினர்களான மாரிமுத்து மகள் கோமதி (14), விநாயகம் மகள் ஹேமலதா (15) ஆகியோர் திருத்தணிக்கு வந்தனர். இவர்களில் கோமதி தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பும், ஹேமலதா 10-ம் வகுப்பும் படித்து வந்த னர். இந்த நிலையில் செவ்வாயன்று காலை மல்லிகா, கோமதி, ஹேம லதா 3 பேரும் பெரியார் நகர் பகுதியில் உள்ள கல்குவாரி குட்டைக்கு குளிக்க சென்ற னர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு சென்ற சிறுமிகள் கோமதியும், ஹேமலதாவும் அடுத்தடுத்து தண்ணீரில் மூழ்கினர். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மல்லிகா சிறுமிகள் 2 பேரையும் காப் பாற்ற முயன்றார். இதில் அவரும் தண்ணீரில் மூழ்கி னார். சிறிது நேரத்தில் மல்லிகாவை மட்டும் சடல மாக மீட்டனர். சிறுமிகள் 2 பேரும் நீரில் மூழ்கி மாய மாகி விட்டனர். தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் வந்து சுமார் ஒரு மணிநேரம் போராடி சிறுமி கள் கோமதி, ஹேம லதாவை சடலமாக மீட்ட னர். பலியான சிறுமிகள் உள்பட 3 பேரின் உடல்க ளும் பிரேத பரிசோதனைக் காக திருத்தணி அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கிளம்பாக்கம் பேருந்து முனையத்தில் 6 ஏக்கரில் பூங்கா அமைக்க திட்டம்
சென்னை,மே 10- கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டு வரும் புதிய பேருந்து முனையத்தில் 6 ஏக்கரில் பூங்கா அமைக்கப்படவுள்ளது. கிளாம்பாக்கத்தில் சுமார் 59.86 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 393.74 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து முனையத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. வரும் ஜுன் மாதம் “ மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட உள்ளது. இம்முனையத்தில் புறநகர் பேருந்து களுக்காக 28.25 ஏக்கர் பரப்பளவில் 226 புறநகர் பேருந்துகள் நிறுத்துவதற்காக 8 நடைமேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. புறநகர் பேருந்துகளுக்காக தனி பணிமனை உள்ளது. மாநகர பேருந்துகளுக்காக 7.40 ஏக்கர் பரப்பளவில் 11 நடைமேடைகளுடன் மாநகரப் பேருந்துகள் வந்து செல்வதற்கு வசதிகள் 60 அமைக்கப்பட்டுள்ளன. தனி அலுவலக கட்டிடம், பாதுகாகப்பட்ட குடிநீர் வசதி, 2 மின் தூக்கிகள், 2 நகரும் படிக்கட்டுகள், கழிவறைகள், மாகர பேருந்துகளுக்காக தனி பணிமனை போன்ற வசதிகள் உள்ளன. இந்நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் 6 ஏக்கரில் பூங்கா அமைக்கப் படவுள்ளது. இதில், இயற்கை நிலக்காட்சி, குளம், கால்வாய், நடைபாதை, கற்சிற் பங்கள், நீரூற்றுகள் ஆகிவை அமைக்கப் படவுள்ளன. இந்நிலையில், புதிய பேருந்து முனையத்தில் அரசு பேருந்துகளை இயக்குவது தொடர்பாகவும், போக்குவரத்து நெரிசலின்றி பேருந்துகளை முறைப் படுத்துவது தொடர்பாகவும், போக்கு வரத்துத் மற்றும் காவல்துறை அதிகாரி களுடன் சென்னை பெருநகர வளர்ச்சிக்குழு தலைவரான அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆலோசனை நடத்தினார்.
கஞ்சா விற்பனை மோதல்
சென்னை,மே 9- அம்பத்தூர், பச்சையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அய்யப்பனுக்கும் கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் பகுதியை சேர்ந்த சோகன் ஜோசப்(23) என்பவருக்கும் இடையே கஞ்சா விற்பனையில் மோதல் ஏற்பட்டது. இந்த தகராறில் அய்யப்பன், தனது கூட்டாளியான ராஜூ வுடன் சேர்ந்து ஜோசப்பை அரிவாளால் வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த ஜோசப் நல்வாய்பாக உயிர் தப்பினார். இது தொடர்பாக கோடம்பாக்கம் காவல் துறை யினர் வழக்குப்பதிவு செய்து பெரும்பாக்கம் பகுதியில் பதுங்கி இருந்த ரவுடி அய்யப்பனை கைது செய்தனர்.
விதிமீறலில் ஈடுபடாத வாகன உரிமையாளர்களுக்கு அபராதத்திலிருந்து விலக்கு
சென்னை,மே 9- விபத்துகளை குறைக்க வும், போக்குவரத்து விதி மீறலில் ஈடுபடுபவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும் போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். சென்னையில் மாநகர சாலைகளில் பல இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப் பட்டுள்ளது. இவற்றில் பதிவாகும் காட்சிகள் மூலம் வாகனங்கள் நிறுத்தும் இடங்களில் விதி மீறல், சிக்னல்களை கவனிக்காமல் செல்லும் வாகனங்கள், ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள், சீட் பெல்ட் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகள் என போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளை கண்காணிக்கப்படுகிறது. பின்னர் அந்த வாகன எண் மூலம் சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்க ளுக்கு அபராதம் விதிக்கப் பட்டு செலான்கள் அனுப் பப்படுகிறது. இந்த முறை யில் சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளரே விதி மீறல் செய்தவராக கருதப்படு கிறார். ஆனால் சில நேரங்க ளில் வாகனங்களின் உரிமை யாளர்கள் அந்த வாக னத்தை ஓட்டி செல்லாமல் தங்களது நண்பர்களுக்கு கொடுக்கும் போது அவர் விதிமீறலில் ஈடுபட்டாலும், வாகன உரிமையாளரே விதி மீறல் செய்தவராக கருதப் படும் நிலை உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் போக்குவரத்து திருத்த விதிகளின்படி போக்கு வரத்து விதிமீறலில் ஈடு படாத வாகனங்களின் உரி மையாளர்கள் தங்களது வாகனத்தை வேறொரு நபர் ஓட்டியதற்கான ஆதாரத்தை வழங்கி, தாங்கள் நிரபராதி என நிரூபிக்கும் வாய்ப்பை வழங்கி உள்ளது. அதன்படி உரிய ஆதாரங்களை போலீசாரிடம் சமர்பித்தால் ஏற்கனவே போலீசார் அனுப் பிய அபராத செலான்கள் ரத்து செய்யப்பட்டு உண் மையான குற்றவாளியின் பெயரில் அவரது ஓட்டுநர் உரிம எண்ணை பயன் படுத்தி வழக்குப்பதிவு செய் யப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
வியாசர்பாடியில் சிக்கிய ரூ.31 லட்சம் ஹவாலா பணம்
பெரம்பூர்,மே 9- சென்னை வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் அருகில் போலீசார் திங்களன்று இரவு வாகன சோதனை யில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் சந்தேகத்துக்கிடமாக 2 பேர் வந்தனர். இதையடுத்து அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் இருவரும் முன்னுக்கு பின் முரணாக பேசியதை யடுத்து மோட்டார் சைக்கிள் சோதனையிடப்பட்டது. அப்போது சீட்டுக்கு அடியில் ரூ.31 லட்சம் இருந்தது. அவர்கள் மாதவரம் சின்ன மாத்தூர் பகுதியை சேர்ந்த தேவராஜ் மற்றும் ராயபுரம் பகுதியை சேர்ந்த மதிவேல் என்பது தெரிய வந்தது. இந்த பணம் ஹவாலா பணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
மாம்பழங்கள் வரத்து அதிகரிப்பு
போரூர்,மே 9- சீசன் காரணமாக கோயம்பேடு பழ மார்க் கெட்டுக்கு மாம்பழம், பலாப்பழம் வரத்து அதி கரித்து உள்ளது. வழக்க மாக திருவள்ளூர், சேலம் மற்றும் ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து மாம்பழங்கள் அதி களவில் மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வரும். கடந்த மாத தொடக்கத்தில் 100டன்னாக இருந்த மாம் பழங்கள் வரத்து பின்னர் படிப்படியாக அதிகரித்து செவ்வாயன்று 300டன்னாக உயர்ந்துள்ளது. கோயம்பேடு மார்க் கெட்டில் மாம்பழம் (கிலோவில்) விலை விபரம் வருமாறு:- இமாம்பசந்த்-ரூ.100, பங்கனப்பள்ளி-ரூ.50, அல்போன்சா-ரூ.90, ஜவாரி-ரூ.70, மல்கோவா-ரூ.90, செந்தூரா-ரூ.40. இதேபோல் கோயம்பேடு மார்கெட்டுக்கு கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் இருந்து பலாப்பழங்கள் அதிகளவில் விற்பனைக்கு குவிந்து வருகிறது.
போச்சம்பள்ளி அருகே கிணற்றில் மூழ்கி 2 பேர் பலி
கிருஷ்ணகிரி, மே 9- பூலான் குட்டை கிராமத்தில் கிணற்றில் தவறி விழுந்து 2 பேர் இறந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே மகாதேவகொல்ல அள்ளி ஊராட்சி பூலான்குட்டை கிராமத்தை சேர்ந்தவர் மாதப்பன். இவர் சென்னையில் பேக்கரி கடையில் வேலை செய்து வருகிறார். இவர் மனைவி சந்திரிகா. இவர்களது மகள் ஸ்ரீ நிகா (5), மகன் அனிருத் (3). இருவரும் தங்கள் வீட்டுக்கு அருகிலுள்ள விவசாய நிலத்தில் விளையாடி கொண்டிருந்தனர். பிறகு, காணவில்லை. இதனையடுத்து தேடியபோது, இருவரும் கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரிய வந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், காவல் துறையினர் இறந்த குழந்தைகளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.