districts

3 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்

 சென்னை, நவ.9- மஸ்கட்டில் இருந்து புத னன்று (நவ.9) சென்னை  வந்த விமானத்தில் பயணித்த  பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற் கொண்டனர். அப்போது ஒரு  பயணியின் லெதர் சூட்கேஸ் மீது சந்தேகமடைந்த அதிகாரிகள், அதனை பிரித்து சோதனையிட்டனர்.  அப்போது, தங்கத்தை கம்பிபோல் மாற்றி அதை சூட்கேசுக்குள் வைத்து தைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறு கடத்தி வரப்பட்ட 3 கிலோ தங்கத்தை அதிகாரி கள் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.1.33 கோடி  இருக்கும் என மதிப்பிடப் பட்டுள்ளது. இந்த கடத்தல் தொடர்பாக 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.