சென்னை, ஆக.4-
ஆற்றில் மூழ்கி பலியான சிறுவர்கள் குடும்பத்திற்கு நிவாரண உதவி அறிவித்திருக்கும் முதல்வர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:-
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் வட்டம், வெள்ளூர் கிராமத் தைச் சேர்ந்த சரவணன் (10), பெ.கணேஷ் (8) ஆகிய இரண்டு சிறுவர்களும் ஆக. 3 ஆம் தேதி கொள்ளிடம் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
அவர்களின் குடும்பத் தினருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் முதலமைச் சரின் பொது நிவாரண நிதியி லிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு தெரிவித் துள்ளார்.