districts

டிராக்டரில் சிக்கி 2 சிறுவர்கள் பலி: தாய் கவலைக்கிடம்

சென்னை, ஆக.8-  மொபட் மீது டிராக்டர் மோதியதில் இரண்டு சிறுவர்கள் பரிதாபமாக உயிரி ழந்தனர். அவர்களின் தாய் உயிருக்கு ஆபத்தான நிலையில், சிகிச்சை பெற்று வருகிறார். மறைமலைநகர் அடுத்த கருநீளம் கிராமத்தை சேர்ந்தவர் தேன்மொழி (35). இவரது மகன்கள் சித்தார்த் (4), லோகேஷ் (3). சனிக்கிழமையன்று டியூசன் சென்டரில் இருந்து தனது  குழந்தைகளை மொபட்டில்  தேன்  மொழி அழைத்துவரும் போது  அங்குள்ள பிரதான சாலையில் எதிர்  திசையில் வந்த லலிதா என்பவரின் மொபட் மீது நேருக்குநேர் மோதி னார். இந்த விபத்தில் மொபட்டுடன் தேன்மொழி, அவரது இரண்டு குழந்தைகள் சாலையில் விழுந்தனர். அப்போது, எதிர்பாராதவிதமாக, அவர்கள் டிராக்டருடன் இணைக் கப்பட்டுள்ள டிரெய்லர் சக்கரத்தில் சிக்கி படுகாயமடைந்தனர். இதைக் கண்ட அப்பகுதியினர், அவர்களை மீட்க முயன்றனர். அப்போது, சித்தார்த் சம்பவ இடத் திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். லோகேஷ், தேன்மொழி ஆகியோரை  அப்பகுதியினர் மீட்டு உடனடியாக  செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு லோகேஷூக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக, எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பி  வைத்தனர். அங்கு தீவிர சிசிச்சை அளிக்கப்பட்ட நிலையில், லோகேஷ்  பரிதாபமாக உயிரிழந்தான். செங்கல் பட்டு அரசு மருத்துவமனையில் தேன் மொழிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.

;