காஞ்சிபுரம்,ஜூன் 15-
காஞ்சிபுரத்தை சேர்ந்த பிரபல ரவுடி ஸ்ரீதர். இவர் இறந்த பின்னர் இவரது ஆதரவாளர்கள் தனித்தனி குழுக்களாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலை யில் ரவுடி ஸ்ரீதர் பிறந்த நாளை முன்னிட்டு அவரது ஆதரவாளர்கள் சமூக வலை தளங்களில் ஸ்ரீதரின் படத்து டன் காவல்நிலையங்களை குண்டுவைத்து தகர்க்கப் போவதாக பதிவிட்டு இருந்தனர். இதுகுறித்து காஞ்சிபுரம் வட்டாட்சியர் புவனேஸ்வரன் போலீசில் புகார் செய்தார். இதை யடுத்து சமூக வலைதளங் களில் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் பதிவிட்ட உழகோல்பட்டு கிராமத்தை சேர்ந்த விஜயகுமார் (19), மற்றும் அவருக்கு முகநூல் பக்கத்தில் பதிவை வெளி யிட உதவிய கிதிரிப் பேட்டை கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் ரோகித் (20) ஆகிய 2 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.