கள்ளக்குறிச்சி, மே 13-
கல்வராயன்மலை பகுதியில் கஞ்சா விற்பனை நடை பெறுவதாக கரியாலூர் காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் துறையினர் அந்த பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது எருக்கம்பட்டு கிராமத்தை சேர்ந்த கோவிந்த ராஜ் (48), வேங்காடு கிராமத்தைச் சேர்ந்த சந்திரன் (39) ஆகியோர் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து காவல் துறையினர் அவர்களை கைது செய்து, அவர்களிடமிருந்த சுமார் 1 கிலோ கஞ்சாவை பறி முதல் செய்தனர்.