districts

வாகனங்களுக்கு கட்டணம் வசூல் 2 பேர் கைது

திருவள்ளுர்,ஜூன் 5-

      பெரியபாளையத்தில் கோவிலில் குத்தகை காலம் முடிந்தும் போலியாக டோக்கன் அச்சடித்து வாக னங்களை நிறுத்த பணம் வசூலித்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.

     போலி ரசீது மூலம் பணம் வாகனங்களை நிறுத்த வந்த பக்தர்களிடம் பணம் வசூலித்துக் கொண்டிருந்த தாராட்சி கிராமம் புதிய காலனியைச் சேர்ந்த சூர்யா (28), தாராட்சி கிராமம், எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த நாகராஜ்(19) ஆகிய 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஏராளமான போலி வாகன வரி வசூல் செய்யும் டோக்கன் பறிமுதல் செய்யப் பட்டது.