சிந்தனை சிற்பி ம.சிங்காரவேலரின் 163வது பிறந்த நாள் கருத்தரங்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மயிலாப்பூர் பகுதிச் செயலாளர் ஐ.ஆர்.ரவி தலைமையில் சனிக்கிழமையன்று (பிப்.19) சாந்தோமில் நடைபெற்றது. மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.குமார், ஏ.பாக்கியம், புலவர் பா.வீரமணி, வாலிபர் சங்கத் தலைவர் ஆர்.நிவேதா, ஜெ.அன்புரோஸ், எஸ்.மகேஷ், பாவலர் பா.நீலகண்டன் உள்ளிட்டோர் பேசினர்.