districts

img

பண்ருட்டி அருகே 15- ம் நூற்றாண்டு சிற்பம் கண்டெடுப்பு

கடலூர், ஆக.7-

    பண்ருட்டியை அடுத்த பைத்தாம்பாடி சத்திரம் ஊரில் தென்பெண்ணை கரையோரம் மொச காத்தம்மன் கோவில் கட்டுவதற்கு மண் எடுத்த போது மண்ணுக்கடியில் 3 கற்சிற்பங்கள் கிடைத்தது. இதுகுறித்து விழுப்புரம் அறிஞர் அண்ணா கலைக்கல்லூரியில் முதுகலை வரலாறு மாணவர்கள் குமரகுரு மற்றும் சூர்யா, வரலாற்று துறை பேராசிரியர் ரமேஷ் மற்றும் தொல்லியல் துறை ஆய்வாளர் இம்மானுவேல் ஆகியோருக்கு தகவல் கொடுத்தனர்.  

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்து கற்சிற்பத்தை ஆய்வு செய்தனர். அப்போது, 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சப்த மாதர்கள் சிற்பம்” என்றனர்.