சென்னை,செப்.26- விநாயகர் சதுர்த்தி விழா வின் நிறைவில் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலை கள் கடலில் கரைக்கப் பட்டது. இந்த சிலைகளை பாலவாக்கம், திருவான்மி யூர், பட்டினப்பாக்கம், காசிமேடு, திருவொற்றியூர் ஆகிய கடற்கரை பகுதியில் கரைக்க போலீசார் அனு மதி அளித்தனர். இதைத் தொடர்ந்து ஞாயிறன்று சிலைகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கடற்கரைகளில் கரைக் கப்பட்டன. இந்நிலையில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்ட போது கொண்டுவரப்பட்ட மாலை, பூஜை பொருட்கள், மரக் கட்டைகள், வாழை இலை கள், கயிறு, தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்ட பொருட்கள் கடற்கரைகளில் குவிந்து கிடந்தன. இதனை அகற்றும் பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. சுமார் 300-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இதில் ஈடுபட்டனர். மொத்தம் 150 டன் குப்பைகள் அகற்றப் பட்டு 50-க்கும் மேற்பட்ட லாரிகளில் ஏற்றி குப்பை கிடங்கு மற்றும் இயற்கை உரம் தயாரிப்பு மையங்க ளுக்கு கொண்டு செல்லப் பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.