districts

img

ரயில் நிலையங்களில் 130 தானியங்கி டிக்கெட் எந்திரம்

சென்னை, பிப்.1- சென்னை கோட்டத்தில் வரும் ரயில் நிலையங்களில் 130 தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரங்களை நிறுவ ரயில்வே நிர்வாகம்  திட்டமிட்டுள்ளது. எழும்பூர், தாம்பரம், சென்ட்ரல், கடற்கரை, அம்பத்தூர், கிண்டி, செங்கல்பட்டு, பூங்கா, ஆவடி, பெருமாள்பூர், கோட்டை, நுங்கம்பாக்கம், பல்லாவரம், பேசின்பிரிட்ஜ், திருவள்ளூர், வில்லிவாக்கம், கோடம்பாக்கம், பரங்கிமலை, சூலூர்பேட்டை ஆகிய 19 ரயில் நிலையங்களில் 34 தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. மீதமுள்ள 96 தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரங்கள் படிப்படியாக அமைக்கப்பட்டு வருகின்றன. வருகிற ஏப்ரல் மாதம் இறுதிக்குள் இந்த பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

;