புதுச்சேரி, ஜூன் 13-
புதுவை, காரைக்காலில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி களில் மே 9ஆம் தேதி முதல் ஜூன் 12ஆம் தேதி வரை 11ஆம் வகுப்பு சேர்க்கைக்கு விண்ணப்பம் பெறப்பட்டது. 10ஆம் வகுப்பில் அரசு பள்ளி களில் படித்த மாணவர்களின் தர வரிசை பட்டியல், நேர்காணல் தேதி அந்தந்த அரசு பள்ளிகளின் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டது.
இந்நிலையில் செவ்வாய்க் கிழமை 11ஆம் வகுப்பு சேர்க்கைக்கு கலந்தாய்வு தொடங்கியது. கலந்தாய்வில் பங்கேற்ற மாணவர்கள் மதிப்பெண் பட்டியல், மாற்று சான்றிதழ், குடியுரிமை சான்றி தழுடன் பெற்றோரை அழைத்து வந்திருந்தனர். மாண வர்கள் விருப்பப்படி அந்தந்த பள்ளிகளில் இடம் வழங்கப்பட்டது. கலந்தாய்வு முடிவில் மீதமுள்ள இடங்கள் இட ஒதுக்கீடு வாரியாக அறி விப்பு பலகையில் ஒட்டப்படும்.
அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு தரவரிசை பட்டியல் ஒட்டப்பட்டு 15ஆம் தேதி கலந்தாய்வு நடத்தப்படுகிறது. 16ஆம் தேதி தனியார் பள்ளி மாணவர்கள் தரவரிசை பட்டி யல் ஒட்டப்பட்டு 17ஆம் தேதி கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. 11ஆம் வகுப்பு சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கு வரும் 19ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்குகிறது.