districts

img

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு திமுக சார்பில் கலைஞரின் 100ஆவது பிறந்த நாள்

சிதம்பரம் அருகே அண்ணாமலை நகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு திமுக சார்பில் கலைஞரின் 100ஆவது பிறந்த நாளையொட்டி கொடி ஏற்றி, 300க்கும் மேற்பட்ட மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு அண்ணாமலை நகர் பேரூராட்சி மன்ற தலைவர் பழனி தலைமை தாங்கினார். குமராட்சி திமுக கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் சங்கர் கலந்து கொண்டு கட்சி கொடியை ஏற்றினார். முன்னதாக ஒடிசா மாநிலத்தில் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் 300க்கும் மேற்பட்ட மக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இதில் கடலூர் மாவட்ட திமுக ஆதிதிராவிட நலக்குழு அமைப்பாளர் பரந்தாமன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் தமிழ்ச்செல்வி, வார்டு உறுப்பினர் அன்பரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.