சென்னை, டிச.25 - சென்னை மாநகராட்சியின் முக்கிய பகுதிகளில் 100 சதவீத மழைநீர் வடிகால் பணி கள் நிறைவடைந்துவிட்டதாகவும் மாந கராட்சியில் விரிவுபடுத்தப்பட்ட பகுதிகளில் 42 சதவீத வடிகால் பணிகள் முடிந்துள்ளன என்றும் ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் இன்று தெரிவித்தார். சென்னை மாநகராட்சி, ராயபுரம் மண்டலம், வார்டு- 60க்குட்பட்ட அன்னை சத்யா நகரில் நடைபெற்ற மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமினையும், கொசுத் தடுப்பு நடவடிக்கைகளையும், டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஞாயிறன்று (டிச.25) பார்வையிட்டு ஆய்வு செய்தார். பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் கலந்துரையாடி கொசு தடுப்பு நடவடிக் கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கடந்த இரண்டரை ஆண்டுகளில் 876 கிலோ மீட்டருக்கு மழைநீர் வடிகால்கள் போடப்பட்டுள்ளன. 876 கி.மீ. பணிகள் நடைபெற்றதால் தான் 60 விழுக்காடு தண்ணீர் 48 மணி நேரத்திற்குள் வடிந்தது. சென்னையில் மருத்துவ முகாம்கள் மூலம் 5.64 லட்சம் பேர் பயன்பெற்றுள்ள னர். மழைக்கு பின் தொற்றுநோய் எது வும் பரவவில்லை. மருத்துவ முகாம்கள் தொடரும். ராயபுரம் மண்டலப் பகுதிகளில் நாள்தோறும் சராசரியாக 5000 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்படுத்தும் பணிகள் தூய்மைப் பணியாளர்களால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தொற்று நோய் பாதிப்பு இல்லை ‘மிக்ஜாம்’ புயல் மற்றும் கனமழையின் காரணமாக கடந்த 6ந் தேதி முதல் 24ந் தேதி வரை 1,34,606 மெட்ரிக் டன் குப்பைக் கழிவுகள் மற்றும் 9,604 மெட்ரிக் டன் தோட்டக்கழிவுகள் என மொத்தம் 1,44,210 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு அகற்றப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கான உடல்நலத்தை பேணும் வகையில், 1ந் தேதி முதல் நேற்று (24ந் தேதி) வரை 9,969 மருத்துவ சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 5,64,958 பயனாளி கள் பயனடைந்துள்ளனர். மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமுக்கு வருகை தரும் பொதுமக்களுக்கு நீர் மற்றும் உணவால் பரவும் நோய்கள் மலேரியா, டெங்கு காய்ச் சல் உள்ளிட்டவை கண்காணிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ‘மிக்ஜாம்’ புயல் மற்றும் கனமழைக்கு பிறகு எந்தவொரு தொற்று நோய்யும் ஏற்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பெரு நகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மொத்தம் 35 ஆயிரம் சாலை கள் உள்ளன. 3 ஆயிரத்து 873 சாலைகளில் 9 ஆயிரத்து 307 சாலைப் பள்ளங்கள் கண்டயறியப்பட்டு 4ஆயிரத்து162 சாலைப் பள்ளங்கள் சீரமைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 5 ஆயிரத்து 145 சாலைப் பள்ளங்கள் சீரமைக்கும் பணிக்கான நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.