districts

img

செய்யாறில் ரூ.1.50 லட்சம் பறிமுதல்

செய்யாறு, பிப். 13- செய்யாறில் உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.50 லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். செய்யாறு திருவத்திபுரம் நகராட்சியில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலை ஒட்டி பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் துணை வட்டாட்சியர் ஸ்ரீதேவி தலைமையில் இந்தோ அமெரிக்கன் பள்ளி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர் செய்து கொண்டிருந்தனர். அப்போது செய்யாறு நோக்கி வந்த காரை மடக்கி சோதனை செய்த போது, காரில் ரூ.1.50 லட்சம் பணம் இருந்தது தெரிய வந்தது. காரில் வந்தவர் வேலூர் மாவட்டம் கே வி குப்பம் தாலுக்கா கொசவன் புதூரை சேர்ந்த சுரேஷ் வயது 38, என்பதும் அவர் கலவை வெடிப்பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது. உரிய ஆவணம் இல்லாமல் பணம் எடுத்து வந்ததால் ரூ.1.50 லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் கி.ரகுராமனிடம் பணத்தை ஒப்படைத்தனர்.